ஏலகிரி மலையில் சொத்து தகராறு!பல் உடைந்த பரிதாபம்!! தொடரும் அராஜகம்?துணைபோகும் எஸ்.ஐ.??

கு.அசோக்,

 ஏலகிரி மலையில் சொத்து தகராறில் அடிதடி ஏற்பட்டது. இதில் பல் உடைந்த நிலையில் ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

 திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலையில் சொத்து தகராறு ஏற்பட்டது. அதன்பேரில் அடிதடி நடந்ததால் பல் உடைந்த நிலையில் ஒருவர் திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

   ஏலகிரி மலை, பாடாணூர் கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சகுந்தலா, சகுந்தலாவின் தாத்தா ராம கவுண்டருக்கு நாசி, அம்சியம்மாள் என இரு மனைவிகள் உள்ளனர்.

 ராம கவுண்டர் தன்னுடைய இரண்டாவது மனைவி அம்சி அம்மாளுக்கு பிள்ளைகள் யாரும் இல்லாத நிலையில் முதல் மனைவிக்கு பிறந்த நாசி, ராமசாமி, காளி ஆகிய மூன்று பிள்ளைகளுக்கு ஏலகிரி மலையில் மங்களூர் அருகே புத்தூர் கிராமத்தில் உள்ள தன்னுடைய சொத்தை பாகம் பிரித்து கொடுத்துள்ளார்.

 அப்பொழுது ஒன்றரை ஏக்கர் இடத்தை தன்னுடைய மகன் ராமசாமி மீது எழுதி கொடுக்காமல் மருமகள் நாசி மீது எழுதிக் கொடுத்துள்ளார்.மருமகள் நாசி தன்னுடைய மகள் சகுந்தலாவிற்கு அதிகார ஒப்பந்த பத்திரம் எழுதிக் கொடுத்த நிலையில் சகுந்தலா தன்னுடைய கணவர் கோவிந்தசாமிக்கு நிலத்தை எழுதி கொடுத்துள்ளார்.(ஒரே குழப்பமாக உள்ளதா)

   இத்தனை பேருக்கு இடம் கை மாறிய நிலையில் ராம கவுண்டரின் கொள்ளுப் பேரன்கள் சகுந்தலாவுக்கு கொடுத்த சொத்தில் தங்களுக்குப் பங்கு உள்ளது எனக்கூறி சகுந்தலாவின் கணவர் கோவிந்தராஜ் நிலத்துக்கு சென்ற பொழுது அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.

   அப்பொழுது கோவிந்தராஜிக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு பல் உடைந்தது. இந்நிலையில் திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 தகவல் அறிந்த ஏலகிரி காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  குறிப்பு:- ஏலகிரிமலையில் நிலத்துக்கு சொந்தக்காரர்களை விரட்டிவிட்டு அடாவடி பேர்வழிகள் சொந்தம் கொண்டாடிக் கொண்டி வருகிறார்கள். அவர்களுக்கு அனைத்து வகையிலும் மேற்படி எஸ்.ஐ.தான் பாதுகாவலராக உள்ளதாக சில தகவல்கள் உறுதிபடுத்துகிறது.