போலிஸ் உடையணிந்து வந்து 3 லட்சம் அபேஸ்!

கு.அசோக்,
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அரசு மதுபான கடை ஊழியர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அவரை போலிஸ் உடையில் வந்த சிலர் வழிமறித்து அவரிடமிருந்த பணத்தை பறித்துச்சென்றனர்.
மேற்படி மாவட்டம், சோளிங்கர் அடுத்த ரெண்டாடி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் பாணாவரம் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு மதுபான கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகின்றார்.
நேற்று வழக்கம் போல் இரவு கடையை மூடிவிட்டு விற்பனையான 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் சென்றார்.
அப்போது ரெண்டாடி பகுதியில் அவரின் வீட்டருகே இரவு 10.30 மணியளவில் காவலர்கள் உடையில் வழிமறித்த வண்டியின் ஆர்சி புத்தகத்தை கேட்டுள்ளனர்.
ஆர்.சி.புத்தகம் வீட்டில் இருப்பதாக பழனி கூறியுள்ளார்.
பழனியிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவர் தோல்பட்டையில் மாட்டியிருந்த பையை கண்இமைக்கும் நேரத்தில் பிடுங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி தலை மறைவாகியுள்ளனர்.
இது குறித்து பழனி சோளிங்கர் காவல் நிலைத்தில் கொடுத்த புகாரின் பேரில், அரக்கோணம் டி.எஸ்.பி.புகழேந்தி கனேஷ் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து விசாரனை நடத்தி தனிபடை அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.