. பிடிஓ வை மாற்றாதீங்க சார்! ப்ளீஸ்!!

. பிடிஓ வை மாற்றாதீங்க சார்! ப்ளீஸ்!!

 ஜி.கே.சேகரன்,

சோளிங்கர்  திமுக ஒன்றிய குழு தலைவர் கலைக்குமாரின் பொய்யான குற்றச்சாட்டை எதிர்த்து 40 ஊராட்சி மன்ற தலைவர்கள் போர்க்கொடி.

 இராணிப்பேட்டைமாவட்டம், சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசனை பணி மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி ஒன்றியத்துக்குட்பட்ட 40 ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இ

 இந்த அவசரக்கூட்டத்திற்க்கு ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு தலைவர் போளிப்பாக்கம் கார்த்தி தலைமை தாங்கினார். செயளாலர் வெங்குப்பட்டு பாலுசந்தர் முன்னிலை வகித்தார்.

 இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில், சோளிங்கர் வளர்ச்சி அலுவலராக அன்பரசன் பணியாற்றி வருகிறார்.இவர் தொகுப்பு வீடுகளை வழங்குவதற்கு ஒரு வீட்டிற்கு 20 ஆயிரம் பணத்தை ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் கேட்பதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் திமுக சோளிங்கர் ஒன்றியக் குழுத் தலைவர் கலைக்குமார் அழுத்தம் கொடுத்து வருவதாக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தகவல் கிடைத்தது.

  அதன் அடிப்படையில் இக்கூட்டத்தில் பேசிய ஊராட்சி மன்ற தலைவர்கள் தொகுப்பு வீடுகள் ஒதுக்குவதற்கு எந்த பயனாளிகளிடம் பணத்தைப் பெற்றுத் தரும்படி  வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் தலைவர்களுக்கு எந்த அழுத்தமும்  கொடுக்கவில்லை.

    உண்மை இவ்வாறு இருக்க  பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது ஏற்புடையது அல்ல.

   எனவே பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலரை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என தீர்மானம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

   மேலும் ஊராட்சி மன்ற தலைவர் உரிமைகளிலும்,பணிகளிலும் ஒன்றிய குழு தலைவரும், ஒன்றிய குழு உறுப்பினர்களும் தலையிடக்கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.