தட்டி தூக்கிய அதிகாரிகள்:- ஊராட்சி தலைவரின் வங்கி காசோலை அதிகாரத்தை முடக்க ஆட்சியருக்கு பரிந்துரை!

பா.சுரேஷ்,
ஊரப்பாக்கம் ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்ட இயக்குனர் குழு விசாரணை மேற்கொண்ட போது குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சொன்னதன் விளைவாக, ஊராட்சி மன்ற தலைவரின் வங்கி காசோலை அதிகாரத்தை முடக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ததாக திட்ட இயக்குனர் குழு வட்டாரத்தில் சொல்லப்படுகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம், ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் சுமார் 65 ஏர்ஸ் காலி நிலம் கொண்ட விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் சாட்சிப் பிள்ளையார் கோவில், மசூதி, தேவாலயம், தனியார் நிறுவனத்துடைய மழலையர் பள்ளி ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இவை சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்டவைகள் ஆகும்.
இதுகுறித்து அன்னை அஞ்சுகம் நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நடைபெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் அன்னை அஞ்சுகம் நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து உத்தரவு நகலுடன் செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் சிந்து பாலா, உதவித் திட்ட இயக்குனர் உமா, தாம்பரம் ஆ£.¢டி.ஓ. செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன், வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன் ஆகிய அதிகாரிகள் நேற்று முன்தினம் ஊரப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். அப்போது ஊரப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் அன்னை அஞ்சுகம் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது மக்கள் பயன்பாட்டிற்கு இருக்கக்கூடிய கோவில், சர்ச் மற்றும் மசூதியை இடிக்க கூடாது என மக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது¢.
நீதிமன்ற உத்தரவு குறித்து மக்களிடம் திட்ட இயக்குனர் விலகிய நிலையில், அதற்கு ஊரப்பாக்கம் பிரியா நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் நிர்வாகிகள் குறுக்கிட்டு எங்கள் பகுதியில் பல மாதங்களாக தேங்கியிருக்கும் குப்பைகள் மற்றும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு பல மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது என குற்றம் சாட்டினர்.
அதிகாரிகள் மக்களிடையே உங்களுடைய கோரிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து விரைவில் உரிய முடிவுகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
மேலும் 4 மணி நேரத்திற்கு மேலாக ஊராட்சி மன்ற அலுவலகம் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள் பல்வேறு குளருபடிகள் நடந்திருப்பதாகவும், சரிவர கணக்குகள் இல்லையென தெரிவித்து அங்கிருந்த கட்டுக்கட்டான ஆவணங்களை கைப்பற்றி கொண்டுசென்றனர்.
இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.