வேலூர் நறுவீ மருத்துவமனையில் இருதய பாதிப்படைந்த சிறார்களுக்கு இலவச அறுவை சிகிச்சை! இணைந்து செயல்படும் அடையார் ஆனந்தபவன் குழுமம்!

வேலூர் நறுவீ மருத்துவமனையில் இருதய பாதிப்படைந்த சிறார்களுக்கு இலவச அறுவை சிகிச்சை! இணைந்து செயல்படும் அடையார் ஆனந்தபவன் குழுமம்!

ம.பா.கெஜராஜ்.

 வேலூர் நறுவீ மருத்துவமனை மற்றும் அடையாறு ஆனந்த பவன் குழுமம் இணைந்து இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிப்பதாக அறிவித்திருக்கிறது.

          வேலூர் நறுவீ மருத்துவமனையும் அடையாறு ஆனந்த பவன் குழுமமும் இணைந்து இருதய நோய் பாதிப்பு உள்ள 5 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட 10 சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் மற்றும் அடையாறு ஆனந்த பவன் குழும நிர்வாக இயக்குநர்

கே. டி. சீனிவாச ராஜா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

          வேலூரில் இயங்கி வரும் நறுவீ மருத்துவமனை பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் குணமடைந்த நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்கும் பணியும் இம்மருத்துவமனையின் மூலம் நடைப்பெற்று வருகிறது.

  இம்மருத்துவமனை தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிறது. இந்த கால கட்டத்தில் இம்மருத்துவமனையில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இம்மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு னல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

 குறிப்பாக இருதய சிகிச்சை, நுரையீரல், மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, குடல்; நோய் சிகிச்சை, மூட்டு வலி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

           மேலும், இம்மருத்துவமனையில் இருதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

  இதில் தற்போது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது. இதுவரையிலும் இருதய நோயால் பாதிக்கப்பட்ட 3000-க்கும் மேற்ப்பட்ட நோயாளிகளுக்கு ஆன்ஜியோ மற்றும் இருதய    அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    

இம்மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இரத்தப்புற்று நோய் மற்றும் எலும்பு மஜ்ஜை சிகிச்சையில் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகளுடன் இயங்கி வரும் வேலூர் நறுவீ மருத்துவமனையும் அடையாறு ஆனந்த பவன் குழுமமும் இணைந்து  இருதய நோயால் பாதிக்கப்பட்ட 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. பெரிய நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சைக்கான முழு செலவினையும் அடையாறு ஆனந்த பவன் குழுமம் ஏற்றுக்கொள்கிறது. தற்போது இதற்காக ரூபாய் நாற்பது இலட்சம் ஒதுக்கி உள்ளனா.

    வேலூர், இராணிப்பேட்டை திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ், இருதய நோய் பாதிப்புக்கான முந்தைய சிசிக்சை விவரங்களுடன் நறுவீ மருத்துவமனையை அணுக வேண்டும்.

   பாதிப்புக்கு உட்பட்ட சிறுவர்களை இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் விநாயக் சுக்லா தலைமையில் டாக்டர் ரே ஜார்ஜ், டாக்டர் ஈஸ்வர கார்த்திக், டாக்டர் ஜாபர், ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் ஆய்வு பரிசோதனை செய்து இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்வர்.

  இதில், குறிப்பாக இருதய நோய் பாதிப்பு அதிகமாக உள்ள சிறுவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

          இது சம்மந்தமாக இந்த வாய்ப்பை பெற நறுவீ மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் திரு. பால் செல்வம் (கைப்பேசி எண்: 8754047796) அவர்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கவும்.

  இது தொடர்பான பேட்டியின் போது  மருத்துவமனை துணை தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், பொது மேலாளர் நிதின் சம்பத், அபிராமி நிதின் ஆகியோர் உடன் இருந்தனர்.