இந்தியாவின் முக்கிய நகரங்களில் அசாம் பவன்! அம்மாநில முதல்வர் வேலூரில் பேச்சு! நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சர் மற்றும் நறுவீ தலைவர்!

ஜி.கே.சேகரன்!
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், சிகிச்சை பெற வருவோர் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் டெல்லி, குஜராத், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு¢, சில்லாங்க் உள்ளிட்ட இடங்களில் அசாம் பவன் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூரில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அசாம் பவன் அடுக்குமாடி கட்டிடத்தை அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாமின்று (செவ்வாய்கிழமை) திறந்துவைத்தார்.
இது பற்றின விவரம் வருமாறு,
வேலூர் ¢மாவட்டம், சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலையில் அசாம் மாநில அரசு சார்பில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் புதியதாக அசாம் பவன் கட்டப்பட்டுள்ளது. இதனை அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா திறந்து வைத்தார். இதில் மத்திய அமைச்சர் ரஞ்சித் குமார் தாஸ், சி.எம்.சி. மருத்துவமனை நிர்வாகிகள், அசாம் மாணவ மாணவிகளும், வேலூரில் தங்கியுள்ள அசாம் மாநில மக்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்.
மேலும் நறுவீ மருத்துவமனையின் நிறுவனத் தலைவர் ஜி.வி.சம்பத் அசாம் முதலமைச்ருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றதுடன் அவரை சந்தித்து சற்று நேரம் பேசினார்.
இந்த விழாவில் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில் அசாம் மாநில மக்களுக்காக அசாம் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வேலூரில் அசாம் பவன் கட்டப்பட்டுள்ளது இதன் மூலம் இங்கு வந்து தங்கி கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அசாம் மாநில சுற்றுலா பயணிகளும் பயன்பெறுவார்கள்.
ரூ23 கோடி மதிப்பீட்டில் இங்கு கட்டப்பட்டுள்ள அசாம் பவன் நகர் மைய பகுதியில் உள்ளதால் அசாம் மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும். அது மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளான கொல்கத்தா சென்னை சிலாங்க் மற்றும் பெங்களூரு¢ மற்றும் டெல்லியில் இரண்டு அசாம் பவன் ஆகியவைகளும் கட்டப்பட்டு வருகிறது.
கொல்கத்தா அசாம் பவன் இடிக்கப்பட்டு புதியதாக அதிநவீன வசதிகளுடன் இந்த ஆண்டு கட்டப்படும். மகாராஷ்டிராவிலும் அசாம் பவன் கட்ட அரசிடம் ஒப்புதல் கோரியும் உள்ளோம் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் அசாம் பவனை கட்டவுள்ளோம் மேலும் டெல்லியில் அசாம் பவனை மட்டும் கட்டாமல் அங்கு மற்ற கன்வென்ஷன் மையங்களை கட்டவுள்ளோம் வேலூரில் அசாம் பவனை திறந்துவைத்துள்ளேன் இதற்காக தமிழக அரசுக்கும் வேலூர் மக்களுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என பேசினார்.
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் இந்திய இறகுபந்து சங்கத்தின் தேசிய தலைவராக உள்ள நிலையில், அவரை இறகுபந்து விளையாட்டு வீரரும், பயிற்சியாளருமான உ.சசிகுமார் சந்தித்து இன்டர்நேஷனல் அளவிளான இறகு பந்து வி¬ள்யாட்டு போட்டிகளை நடத்திட கோரி பேசினார்.
குறிப்பு:- அசாம் முதல்வருடன் இணைந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க அரசு தரப்பிலிருந்து உயரதிகாரிகள் எவரும் வரவில்லை, இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கியஸ்தர்களை வரவேற்கவோ, வழியனுப்பவோ சற்று சிரமப்பட்டனராம். இவற்றையெல்லாம் மத்திய உளவுத்துறை குறிப்பெடுத்ததாம்.