ஆதிதிராவிடர் மாணவர்களை ஏமாற்றிய அதிமுக கால ஆட்சி? ரூ.927 கோடியை அரசுக்கே திருப்பிக் அனுப்பிய ஆதாரம்! ஆர்.டி.ஐ.மூலம் அம்பலம்!!

ஆதிதிராவிடர் மாணவர்களை ஏமாற்றிய அதிமுக கால ஆட்சி? ரூ.927 கோடியை அரசுக்கே திருப்பிக் அனுப்பிய ஆதாரம்! ஆர்.டி.ஐ.மூலம் அம்பலம்!!

 ம.பா.கெஜராஜ்,

 கடந்த ஐந்தாண்டு கால அதிமுக ஆட்சியில்  (2016 - 2021 வரை) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.927 கோடியை அரசுக்கே திருப் திருப்பிக் அனுப்பிய ஆதாரம் தற்போது கிடைத்திருக்கிறது.மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக இந்த தகவலை சேகரித்துள்ளார்.

 "ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 60க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் வன்கொடுமைகளைச் சந்திப்பவர்களுக்கான இழப்பீடு, தொகுப்பு வீடு வழங்குவது, மாணவர் விடுதி பராமரிப்பு, நிதியுதவி எனப் பல்வேறு திட்டங்கள் உள்ளன," அது மட்டுமின்றி  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் வெளிநாடு சென்று பட்டம் பெறுவதற்காக ஒதுக்கப்படும் நிதியும் முறையாக செயல்படுத்தப்படாமல் இருந்த தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

 அந்த வகையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் வெளிநாடு சென்று பட்டம் பெறும் திட்டத்தில்  கடந்த 2012-13 முதல் 2020-21 நிதியாண்டு வரையிலான 9 ஆண்டுகளில் மூன்று மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு பயனந்துள்ளனர். (இதற்காக வெறும் 22 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்).

 இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 9 ஆண்டுகளில்  ரூ.2,95,83,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் வெறும் ரூ.1,68,66,000 மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ரூ.1,27,17,000 செலவு செய்யப்படவில்லை.

 அதே போல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டும் ஒருவர்கூட இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறவில்லை. இந்நிலையில் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்திற்கு ரூ.5,31,00,000 நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 இது போன்ற செயல்பாடுகளால் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.925 கோடி செலவு செய்யப்படாமல் அரசுக்கு நிதியை திரும்ப ஒப்படைத்த நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறையின் பல்வேறு திட்டங்களின் கீழ் உதவி கேட்டு அம்மக்கள் விண்ணப்பிக்கும்போது போதிய நிதியில்லை என்று அதிகாரிகள் கையை விரித்துள்ளார்கள்.

  அதில் விதிவிலக்காக 2016-க்கு முன்னர் சில வருடங்கள் பட்ஜெட்டில் ஒதுக்கியதைவிட கூடுதலான நிதி செலவு செய்துள்ளதையும் மறுக்க இயலாது.

  அதே போல் இந்த திட்டத்துக்கு கடந்த 2012 முதல் 2021 வரை 9 ஆண்டுகளுக்கு ரூ.2.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ.5.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது கவனிக்கப்படக்கூடிய அம்சமாக இருக்கிறது.

  என்னதான் இது போன்ற திட்ட்டங்களை அரசு தீட்டினாலும், நிதியை ஒதுக்கினாலும், அரசு போதிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். திட்டத்தின் நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும். திட்டங்களை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்த வேண்டும்.

   இதில் முக்கிய விஷயங்கள் சில கூறப்படுகிறது.

  அத்துறை பணியாளார்களுக்கு ஒதுக்கப்படும் சம்பளத்திற்கான  நிதியை பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதால் அரசுக்கு திருப்பி கொடுத்தாக வேண்டும் என்கிற சூழல் உள்ளது.

  என்ன இருந்தாலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உரிய முறையில் செயல்படுத்தும் வண்ணம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்கிற கோரிக்கைக்கு இடையே அரசு  வெளிநாடு சென்று கல்வி கற்க உதவித் தொகை பெறுவோருக்கான விதியை சற்று தளர்த்தி ஆண்டு வருமான வரம்பு 2.5 லட்சத்திலிருந்து 8 லட்சமாக இந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது.