அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி!

அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி!

ஜி.கே.சேகரன்,

 எண்ணும் எழுத்தும் என்ற அனைத்து குழந்தைகளும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமென விழிப்புணர்வு கலை பிரச்சார பயணத்தை வேலூர் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் துவங்கி வைத்தார்

 வேலூர்மாவட்டம் ,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித்துறையின் சார்பில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டுமென்ற நோக்கிலும், மக்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலைப்பிரச்சார பயணம் என்னும் எழுத்தும் என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார்.

   இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர் தப்பிசை மற்றும் தவில் இசையுடனும் கிராமிய பாடல்களுடன் கிராமம் கிராமமாக சென்று வேன் மூலம் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.