உதயகுமாருக்கு ஊமைகுத்து விடும் ஓ.பி.எஸ்.டீம்!!

ஜி.சாந்தகுமார்,
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்ச ஆர்.பி. உதயகுமாருக்கு ஓ.பி.எஸ்.தரப்பினர் ஊமைகுத்து குட்டியிருக்கிறார்கள்.
ஆம், அவரது போட்டோவை பயன்படுத்தி போஸ்டர்களாய் ஒட்டியிருக்கிறார்கள்.
அதில் 'ஊமையாக கூட வாழு! உதயகுமார் போல வாழாதே!!" என்ற வாசகத்தோடு ராமநாதபுரம் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டியிருக்கிறார்கள்
ஓ.பி.எஸ்.ஸை கடுமையாக விமர்சித்து வரும் முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு எதிராக தென் மாவட்டங்கள் ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆர்.பி.உதயகுமாருக்கும் ஓபிஎஸ் தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருப்பதாக கூறப்படும் நிலையில் அதே சமுதாயத்தைச் சேர்ந்த ஆர்.பி.உதயகுமார் எதிர்தரப்பான ஈபிஎஸ் பக்கம் தஞ்சமடைந்துள்ளார்.
இதனால் தேவர் சமுதாயத்தில் பிறந்து தேவர் சமுதாயத்திற்கே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துரோகம் செய்துவிட்டதாக சமீபத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 'ஊமையாக கூட வாழு! உதயகுமார் போல வாழாதே!!" என்ற வாசகத்தோடு ஆர்.பி.உதயகுமார் மாஸ்க் அணிந்த புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அரசியல் பயணம் லீ என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஓபிஎஸ் ஆதரவாளர்களின் இந்த போஸ்டர்களால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.