பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆப்கானிஸ்தான் யுத்தங்களுக்கு ஆள் அனுப்புகிறது! சொன்னவர் தமிழக ஆளுநர்!

க.முகில்,
சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் நாடு யுத்தங்களுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆள் அனுப்புகிறது, மனித உரிமை இயக்கம், மாணவர்கள் மற்றும் அரசியல் இயக்கம் என பல்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்கிற பெயரில் இயங்கி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில், நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரோடோ மித்ரா எழுதிய 'ஜிபிணி லிஹிஸிரிமிழிநி பிசீஞிஸிகி' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த விழாவில் பேசிய ஆளுநர், இந்தியாவில் சமூக அமைதியை குலைக்க சில அமைப்புகள் முயற்சித்து வருவதாகவும், மேலும்,அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுகிறவர்கள் பயங்கரவாதிகள். அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுவதை ஏற்க முடியாது.
மாவோயிஸ்டாக இருந்தாலும் சரி, காஷ்மீரில் இருந்தாலும் சரி, வடகிழக்கில் இருந்தாலும் சரி, நாட்டில் வன்முறையை அரசியல் ஆதாரமாக பயன்படுத்தும் எந்த ஒரு அமைப்பும் பயங்கரவாத அமைப்பாகும்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா யுத்தத்துக்கு ஆள் அனுப்புகிறது, அதாவது சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் யுத்தம் நடத்தவும் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடவும் ஆட்களை அனுப்புகிறது.இதனை சில கட்சிகள் ஆதரிப்பது பெரும் தவறு மட்டுமன்றி ஆபத்தானது. நாட்டுக்கு அச்சுறுத்தலானது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
ஆளுநரது இந்த பேச்சு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.