காவல் துறை மான்ய கோரிக்கைக்கு தயாராகும் அதிகாரிகள்!

காவல் துறை மான்ய கோரிக்கைக்கு தயாராகும் அதிகாரிகள்!

G.R.

காவல் துறை மான்ய கோரிக்கைக்கு அதிகாரிகளை ம்தல்வர் தயார் படுத்தினார். அதற்காக இன்று முதல்வர் தலைமையில் உயர் போலிஸ் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது.

 வரும், 9, 10 ஆம் தேதிகளில் உள்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற உள்ள நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கருத்துக்களை கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இதில் விசாரணைக் கைதி விக்னேஷ் மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் உடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாராம்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலாளர், சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர், சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.