போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டம்:- வேலூர் சரகம் சார்பில் நடைபெற்ற விழாவில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்பு!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
வேலூர் சரக காவல்துறையின் சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் ஒழுங்கு) திரு.கி.சங்கர், இ.கா.ப., அவர்கள் தலைமையில் அலுவலர்கள் மற்றும் மாணாக்கர்கள் அனைவரும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் மருத்துவர் . நா. கண்ணன், இ.கா.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.எம்.எஸ். முத்துசாமி, இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர்கள் திரு. எஸ். ராஜேஷ் கண்ணன், இ.கா.ப., (வேலூர்), மருத்துவர் கே. கார்த்திகேயன், இ.கா.ப., (திருவண்ணாமலை), மருத்துவர் கே. எஸ். பாலகிருஷ்ணன், இ.கா.ப., (திருப்பத்தூர்),
செல்வி கிரன் சுருதி, இ.கா.ப., (ராணிப்பேட்டை), மருத்துவர் தீபா சத்யன், இ.கா.ப., (மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மையம்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.முனுசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் மருத்துவர் . நா. கண்ணன், இ.கா.ப., அவர்களும், காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் ஒழுங்கு) திரு.கி.சங்கர், இ.கா.ப., அவர்கள் மாணவ-மாணவியர்களிடேயே சிறப்புரையாற்றினார்.