குடிநீருக்காக மறியல்! எட்டிபார்க்காத அலுவலர்கள்!!

குடிநீருக்காக மறியல்! எட்டிபார்க்காத அலுவலர்கள்!!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,

  கோவை, மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் 20 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் கோவை பொள்ளாச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

 இந்த மறியலால் பொள்ளாச்சி சாலையில் பெரும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

 அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். ஆனாலும் சம்மந்தப்பட்ட அலுவர்கள் ஒருத்தர் கூட அந்தபக்கம் வரவேயில்லை!