தீபாவளி முடிந்து திரும்புவோருக்கு அரசு ஏற்படுத்திய வசதிகள்!

தீபாவளி முடிந்து திரும்புவோருக்கு அரசு ஏற்படுத்திய வசதிகள்!

 உ.சசிகுமார்,

  தீபாவளி 12 ஆம் தேதியும் அதற்கு அடுத்த நாளான நவம்பர் 13 ஆம் தேதியும் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. எனவே இன்றைய தினமும் சொந்த ஊர்களில் இருந்து சென்னை பட்டணம் திரும்புவோர் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு போக்குவரத்து 2,100 பேருந்துகளை ஏற்பாடு செய்திருக்கிறது.

 அதனுடன் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு 975 பேருந்துகளும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 1,395 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதேபோல் 14-11-2023 செவ்வாய் அன்று பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு 917 பேருந்துகளும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 1,180 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இவற்றில் முன்பதிவு பேருந்துகளும் அடங்கும்.

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவிற்கு www.tnstc.in இணையதளம் மூலமாகவும் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் தொடர்பாக தகவல்கள் அறிந்து கொள்ள, புகார்கள் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

  அதே போல் பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் தொடர்பான விவரங்கள் தெரிந்து கொள்ள பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை திரும்பியதும் நகரின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் வகையில் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருக்கிறார்.