காலை 6 மணி முதல் வெற்றி சான்று வழங்கும்வரை போலிஸ் பாதுகாப்பு! சகஜ நிலைக்கு திரும்பும்வரை அங்கேயே இருக்கனுமாம்!

காலை 6 மணி முதல் வெற்றி  சான்று வழங்கும்வரை போலிஸ் பாதுகாப்பு! சகஜ நிலைக்கு திரும்பும்வரை அங்கேயே இருக்கனுமாம்!

ம.பா.கெஜராஜ்,

 காலை 6 மணிக்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. 

 543 தொகுதிகள் கொண்ட இந்திய பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இவ்வாறு மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

   543 தொகுதிகள் கொண்ட இந்திய நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

  அதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.கஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இவ்வாறு மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

   நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை 04.06.2024 தேதி நடைபெறுவதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையமான இராணிப்பேட்டையில் வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  அதே போல் வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை மாவட்டத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

   இந்தப் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி டி.வி கிரண் ஸ்ருதி ,இ.கா.ப., அவர்கள் தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 4 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் அவர்கள் மேற்பார்வையிலும், காவல் ஆய்வாளர்கள் , உதவி ஆய்வாளர்கள் ஆயுதப்படை காவலர்கள் ,மத்திய ஆயுத காவல் படை வீரர்கள்  மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை உட்பட சுமார் 800 நபர்கள் தேர்தல் வாக்கு எண்ணும் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இவ்வாறு மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

 நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருப்பதால் இந்த பணியில் 38 ஆயிரத்து 500 பேர் ஈடுபட உள்ளனர். இதில், வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் பேரும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து வைக்கும் பணியில் 24 ஆயிரம் பேரும், நுண் பார்வையாளர்களாக 4 ஆயிரத்து 500 பேரும் ஈடுபடுகிறார்கள்.

 தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். அரசியல் கட்சி அலுவலகம், பொது இடங்களில் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது.

   காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் தலா 1000 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க உள்ளார்கள். இதன் மூலம் வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறார்கள்.

  ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஆயுதப்படை போலீசார், சிறப்பு காவல் படை போலீசார் ஆகியோரும் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கி ஏந்திய 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். வாக்கு எண்ணும் மையங்களை தவிர்த்து மற்ற இடங்களில் சுமார் 60 ஆயிரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள்.

  முக்கிய அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், பொது இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் மாநிலம் முழுவதும் நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் போலிசார் காலை 6 மணிக்கே பணிக்கு சென்றுவிடவேண்டும்வாக்கு எண்ணிக்கை முடிந்து வேட்பாளர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர், மையங்கள் அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னரே போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றுமுத்தரவிடப்பட்டிருக்கிறது.