வாக்குப்பதிவு சதவிகிதத்தை மாற்றி மாற்றி வெளியிட காரணம் என்ன? தேர்தல் அலுவலர்கள்  அப்டேட்டுக்கு வரவில்லையா?

வாக்குப்பதிவு சதவிகிதத்தை மாற்றி மாற்றி வெளியிட காரணம் என்ன? தேர்தல் அலுவலர்கள்  அப்டேட்டுக்கு வரவில்லையா?

ம.பா.கெஜராஜ்,

  மக்களவை தேர்தல் முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகள் 19-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

   இந்நிலையில் மணிப்பூரில் நடந்த துப்பாகி சூடு காரணமாக அங்கு 11 இடங்களில் ஏப்ரல் 23 திங்கள் கிழமை மறுவாக்கு பதிவானது நடைபெற்றது. ஆனால்   இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

 இந்நிலையில் 39 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவிகிதத்தை அறிவிப்பதில் தேர்தல் அலுவலர்கள் தடுமாறி விட்டனர் என்று அரசில் கட்சியினர் சொல்கிறார்கள்.

  பொதுவாக வாக்கு பதிவு தினத்தில் காலை 9 மணி, 11 மணி, 1 மணி, 3 மணி 5 மணி மற்றும் மாலை 7 என வாக்கு பதிவு சதவிகிதத்தை அதிகார பூர்வமாக வெளியிடுவார்கள். அதாவது ஒவ்வொரு 2 மணி நேரத்துக்குமான வாக்குப்பதிவு சதவீதமும் வழங்கப்படும்.

 பின்னர் தொகுதி வாரியாகவும், சராசரியாகவும் வாக்குப்பதிவு நிலவரம் இரவு 9 மணிக்குள் தெரிவிக்கப்படும். இமுறையும் அப்படி தெரிவிக்கப்பட்டது.

 மேலும், வாக்குபதிவுக்கு மறுதினம், இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தை தமிழக தலைமை தேர்தல் அலுவலர்  வெளியிடுவார். இதில், வாக்குப்பதிவு அன்று இரவு வெளியிட்டதைவிட மறுநாள் வெளியிடப்படும் வாக்குப்பதிவு சதவீதம் சுமார் 2 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருக்கும். அதை கடந்து சென்றதில்லை.

  அப்படியிருக்க 19.04.2024 ஆம் தேதி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இரவு 7 மணிக்கு வெளியிடப்பட்ட தகவல்படி, தமிழகத்தில் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இதில், வழக்கமாக குறைவாக வாக்குப்பதிவு நடைபெறும் சென்னை மாவட்டத்தின் மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் 10 சதவீதத்துக்கு மேல் கூடுதலாக வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நள்ளிரவு 12 மணிக்கு வெளியான தேர்தல் ஆணையத்தின் உத்தேச வாக்குப்பதிவு சதவிகிதத்தில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் 69.46 சதவீதம் என தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, சென்னையில் கடந்த 2019 மக்களவை தேர்தலைவிடவும் வாக்கு சதவீதம் குறைந்திருந்ததும் தெரியவந்தது.

 இந்த குழப்பத்திலிருந்து விடுபடுவதற்குள் வாக்குப்பதிவு முடிந்து 44 மணி நேரம் கழித்தே,இறுதி வாக்குப்பதிவு நிலவரம் 69.72 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த 2014, 2016, 2019-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவை, சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களின்போதும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டது. அப்போது எந்த குழப்பமும் ஏற்பட்டது இல்லை.

  இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு செய்தியாளர்களுக்கு அளித்த செய்தி குறிப்பில், ''அனைத்து தொகுதிகளிலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு விவரம் பெற முடியாத நிலையில், மாதிரி விவரம் தயாரிக்கப்பட்டு தோராயமாக வெளியிடப்பட்டது'' என குறிப்பிட்டுள்ளார்.

  செல்போன் பயன்பாடு,  செயலி ஆகியவை அமலுக்கு வருவதற்கு முன்பு, வாக்குச்சாவடி வாரியாக 2 மணி நேரத்துக்கு ஒருமுறை, பதிவான வாக்கு விவரத்தை மண்டல அதிகாரி சேகரித்து, சட்டப்பேரவை தொகுதிக்கான பொறுப்பு அலுவலரிடம் வழங்குவார். பின்னர், மக்களவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் தரவு தொகுக்கப்பட்டு, தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும்.

  அதேநேரம், செல்போன் பயன்பாடு வந்தபிறகு, அதில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் பரிமாறப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில், வாக்குப்பதிவு நிலவரத்துக்கான புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அப்போதும் இதுபோன்ற பிரச்சினை ஏதும் எழவில்லை. ஆனால் இந்த முறை, இப்பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

 இத்தனைக்கும் மண்டல அதிகாரி 2 மணி நேரத்துக்கு ஒருமுறையும், காவல் துறையினர் 1 மணி நேரத்துக்கு ஒருமுறையும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வாக்குப்பதிவு நிலவரத்தை பெறுகின்றனர். நாங்கள் செயலியிலும், வாட்ஸ் அப் மூலமும் அதிகாரிகளுக்கு அளிக்கிறோம்.

  அதன்பின், வாக்குப்பதிவு முடிந்ததும், 17 சி படிவத்திலும் தரவுகளை சரிபார்த்து வழங்குகிறோம். இந்ததரவுகளை பதிவு செய்தே,மொத்த வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிடப்படுகிறது. நேரடியாக மண்டல அலுவலர்களும் தரவுகளை பெற்று, உயர் அதிகாரிகளிடம் வழங்கியுள்ள நிலையில், இந்த பிரச்சினை எப்படி உருவானது என்பது பெரிய குழப்பம் தான்.

  ஆனால் முக்கிய அரசியல் கட்சிகள் ஏனோ தெரியவில்லை இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இதற்கு தேர்தல் அலுவலர் சத்திய பிரத சாகு ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் பழைய முறை படியே எங்களுக்கு தகவலை அளித்ததால் சற்று தாமதமானது தவிர, வேறு எந்த குளறுபடியும் இல்லை. அவர்கள் செயலியையும் அப்டேட்டையும் அவ்வளவாக பயன்படுத்தவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

அதற்காகவா அத்தனை பயிற்சி கொடுத்தீர்கள்? என்று கேட்கத் தோன்றுகிறது சரி பரவாயில்லை...