இடையூறு இன்றி புதுப்பிக்க உதவி புரியும் ஆண்டவரே! பொலிவு பெற போகும் சிறுவர் புதுவாழ்வு மையம்!
ம.பா. கெஜராஜ்,
அமெரிக்க குடும்பத்தினர் அன்பளிப்பாக அமைத்துக் கொடுத்த சிறுவர் புது வாழ்வு மையத்தை இடையூறு இன்றி புதுப்பிக்க உதவி புரியும் ஆண்டவரே என்று சிஎஸ்ஐ பேராய பொருளாளர் மற்றும் உப தலைவர் உள்ளிட்டோர் இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.
வேலூர் மாவட்டம், வேலூரை அடுத்த காட்பாடி பகுதியில் கசம் என்கின்ற கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் அளவில் விவசாய பண்ணை செயல்பட்டு வருகின்றது.
இது தென்னிந்திய திருச்சபை பேராயத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் மேற்படி பகுதியில் பல்வேறு கட்டிடங்களும் பள்ளிக்கூடங்களும் உள்ளன.
அவற்றில் புதர் மண்டி கிடக்கும் பல இடங்களும் அடக்கம்.
இந்நிலையில் கசம் வேளாண் பண்ணை பகுதியில் பகுதியில் சிறுவர் “புது வாழ்வு மையம்” என்கின்ற பெயரில் ஏழை எளிய மாணவர்களுக்காக ஒரு செயற் கூடம் இயங்கி வந்திருக்கிறது. சுத்துப்பட்டு உள்ள கிராமங்களில் வசிக்கும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் தங்கி அருகில் உள்ள தெவிலியாஸ் பள்ளிக்கூடத்தில் கல்வி பயில இந்தக் கூடம் செயல்பட்டு வந்தது.
இந்தக் கூடத்தை கிளான் வேன் என்கின்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த குடும்பத்தினர் கொடையாக அமைத்துக் கொடுத்ததாகும்.
அதை 1967 மற்றும் 70 போன்ற ஆண்டுகளில், டாக்டர் எம்.ஜே .ஜான் அவர்கள் புதுப்பித்து சீரமைத்து வைத்திருக்கிறார்.
அவருக்குப் பின் வந்தவர்கள் அதை ஏனோ தெரியவில்லை கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டதால் அந்த இடம் முழுவதும் புதர் மண்டி அந்த கட்டிடமும் அந்த வளாகமும் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் அதை அடையாளம் கண்டு அந்தக் கூடத்தை மீண்டும் புது வடிவமைத்து விடுதிகள் அமைக்கவும், ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி வசதியை கொடுக்கவும் தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதற்கு ஏதுவாக புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியும் கட்டுமானம் செய்யும் பணியும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வேலூர் பேராயத்தின் பொருளாளர் திரு. T.சுந்தரராஜன், ஆயர்கள் பி. சுரேஷ், பேராய உப தலைவர், ரூபஸ், ஏரியா சேர்மன், டேவிட் ஞானபிரகாசம் ரவிச்சந்திரன் மற்றும் எம் ரூபஸ், தெவிலியாஸ் பள்ளி விடுதி காப்பாளர் மகிமை, வில்சன் ஆகியோர் அந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது இப்பணிகளை இடையூறு ஏதும் இன்றி நல்லபடியாக முடிக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டனர்.
மேற்படி இந்த கசம் விவசாய பண்ணையானது ஆசியாவுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததாகும். இங்குதான் முதன் முதலில் ஒட்டுப்பயிரை கண்டுபிடித்தனர், அதேபோல் செயற்கை முறையில் கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்யும் முறையும் இங்கு தான் கண்டுபிடிக்கப்பட்டது, அதேபோல் வேலூர் என்றாலே நீச்சல் குளத்திற்கு மிகவும் புகழ்பெற்ற இடம் கசம் என்பதும் நினைவு கூற தக்கதாகும்.