ஜெயலலிதாவின் ஹெலிபேடில் இறக்கப்பட்ட ஹெலிகாப்டர்!

கு.அசோக்,
மாந்தாங்கல் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை உரிமையாளர் தொழிற்சாலைக்கு செல்ல நிலத்தில் ஹெலிகாப்படரை நிறுத்தியதால் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்ற கிராம மக்கள்.
இராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் பகுதியில் உள்ள நில பகுதியில் நேற்று காலை திடீரென ஹெலிகாப்டர் ஒன்று தரை இறங்கியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கூட்டம் கூட்டமாக சென்று ஹெலிகாப்டரை கண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஹெலிகாப்டர் குறித்து விசாரித்த போது, இராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பேஸ் 3 பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் பெங்களூரில் இருந்து தொழிற்சாலையை அவ்வப்போது வந்து கண்டு செல்வது வழக்கம். அவர் எப்பொழுதும் பெங்களூரில் இருந்து தனியார் கல்லூரியில் உள்ள ஹெபேடில் தரையிரங்கி ஹெலிகாப்டர் மூலமாக வந்து செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தருவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் இந்த ஹெலிகாப்டர் இறக்கப்பட்டது.
மேலும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் அதை தொழிற்சாலை உரிமையாளர் வந்தவுடன் அங்கிருந்து பறந்து சென்றதுஇதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.