எடப்பாடி பழனிச்சாமியும்- 4,800 கோடி ரூபாய் 'டெண்டர்' முறைகேடும்:- புது மனு அளித்த ஆர்.எஸ்.பாரதி!!

எடப்பாடி பழனிச்சாமியும்- 4,800 கோடி ரூபாய் 'டெண்டர்' முறைகேடும்:- புது மனு அளித்த ஆர்.எஸ்.பாரதி!!

 ம.பா.கெஜராஜ், 

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் 4,800 கோடி ரூபாய் 'டெண்டர்' முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக இருந்த போது, நெடுஞ்சாலைத் துறையில் 4,800 கோடி ரூபாய் டெண்டரை, தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாரி வழங்கினார்.

 இது குறித்து தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பகிங்கரமாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ல் அவர், மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து சி.பி.ஐ.,விசாரிக்க உத்தரவிட்டது.

   இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமி மேல்முறையீடு செய்தார். சி.பி.ஐ., விசாரணைக்கு, இடைக்கால தடை கோரி பெற்றார்.எனவே உச்ச நீதிமன்றம், விசாரணையை ஒத்தி வைத்தது.ஆனால் இந்த மனு மீதான விசாரணை நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது.

  இந்நிலையில், மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம், தமிழக அரசு வக்கீல் சமீபத்தில் முறையிட்டார்.

  இதையடுத்து இந்த மனு, கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, இதில் வாதாடுவதற்கு அவகாசம் வேண்டும் என, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

 அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர். இந்த வழக்கு இன்று, விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி நேற்று தாக்கல் செய்த கூடுதல் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,ஒப்பந்த பணிகளுக்கு அதிக விலை வழங்கியுள்ளதால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலக வங்கி வழிகாட்டு விதிமுறைகளை மீறி, தன் உறவினர்களுக்கு பழனிசாமி டெண்டர் வழங்கி உள்ளார்.

 எனவே, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற பழனிசாமியின் மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  ஆக 4,800/-கோடி ஊழல் மேட்டர் விசுவரூபம் எடுக்கும் என்பதில் அய்யம் வேண்டாம்.