அம்மா ஓட்டலில் சரக்கு விற்ற பெணகள் அரெஸ்ட்!

கு.அசோக்,
நாட்றம்பள்ளி அருகே கள்ள மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் பிடிபட்டன, 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்த்தூர் குப்பம் பகுதியில் வசிப்பவர் சுகுணா (40). இவர் சிக்கன் கடை நடத்தி வருகின்றனர்.
அதே பகுதியில் வசிக்கும் சந்திரா (52) இவர் அம்மா ஓட்டல் என்கிற பெயரில் உணவு விடுதி நடத்துகின்றனர்.
இந்நிலையில் ஆத்தூர் குப்பம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மூலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சுகுணா மற்றும் சந்திரா இருவரும் வெளிமாநில மது பாட்டில்களை கள்ள மார்க்கெட்டில் அமோகமாக விற்பனை செய்துவருவதாக ரகசிய தகவல் கொடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப் பிரிவு காவல் உதவிஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் நாற்றம்பள்ளி காவல் ஆய்வாளர் முனிரத்தினம் ஆகியோர் தலைமையில் சென்ற காவலர்கள் சுகுணாவிற்கு சொந்தமான சிக்கன் கடையில் ஆய்வு செய்த பொழுது ஒரு பண்டலுக்கு 48 பாட்டில்கள் அடங்கிய சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள 92 பண்டல்களை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் சந்திரா நடத்தும் உணவு விடுதிக்குச் சென்று சோதனை செய்ததில் 105 மது பெட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர்.பின்பு சுகுணா,சந்திரா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை திருப்பத்தூர் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவற்றின் மதிப்பு சுமார் ஐந்து லட்சம் இருக்கும் என காவல் அலுவலர்கள் சொல்கிறார்கள்.