தேசிய கொடி ரூ.25/- தபால் நிலையங்களில் விற்பனை!!

ஜி.கே.சேகரன்,
நாட்டின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி வேலூர் தலைமை தபால் நிலையத்தில் நேற்று முதல் தேசியக்கொடி விற்பனை தொடங்கப்பட்டது.தேசிய கொடியை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்
வேலூர் மாவட்டம், வேலூர் தலைமை தபால் நிலையத்தில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து வீடுகள்,அலுவலகங்கள்,பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்கள் பேருந்துகள் மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் தேசிய கொடியை ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன் அடிப்படையில் பொது மக்களுக்கு தேசியக்கொடி வழங்குவதற்காக தபால் நிலையங்களிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனையொட்டி வேலூர் தலைமை தபால் நிலையத்தில் நேற்று தேசிய கொடி விற்பனையை, வேலூர் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் துவக்கி வைத்தார்.இதில் துணியால் ஆன தேசிய கொடி ஒன்றை ரூ.25 கொடுத்து பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.