ரவுடிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து எங்களை காப்பாற்ற வேண்டும்! வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பேட்டி!

ரவுடிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து எங்களை காப்பாற்ற வேண்டும்! வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பேட்டி!

ஜி.கே.சேகரன்,

கார்ப்ரேட் கம்பெனிகளின் நெருக்கடிகளை எங்களது வணிகர்கள் தாக்குபிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்  கண்ணகி நீதிகேட்ட மண் மதுரை, அந்த மண்ணிலே வணிகர்களுக்காக  நாங்களும் நீதி கேட்க இருக்கின்றோம், ரவுடிகளிடமிருந்தும் அதிகாரிகளிடமிருந்தும் எங்களை காப்பாற்ற வேண்டு, மதுரை மாநாடு வணிகர்களுக்கு திருப்புமுனை மாநாடாக அமையும், ஆம்பூரில்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி.. ,

  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மண்டல தலைவர் கிருஷ்ணன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் திருவுருவ படத்திறப்பு விழா நடைப்பெற்றது.

  இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்ங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று, கிருஷ்ணன் அவர்களின் திருவுருவ படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா பேசியதாவது,

  தமிழ்நாடு வணிகர் சங்கத்தின்  41-வது மாநில மாநாடு விடுதலை முழக்க மாநாடாக மதுரையில் நடைப்பெற இருக்கிறது. இந்த மாநாடு என்பது வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக நடைபெறும். இந்த மாநாடு வணிகர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளை, அத்துமீறல்களை ஒழித்துகட்டகூடிய மாநாடாக இருக்கும்.

 விடுதலை முழக்கம் என்பது வணிகர்களுக்கு ஏற்பட்ட வரிப்பிரச்சனைகள், அடிமைப்பிரச்சனைகள், ரவுடிகளால், தொல்லை, அதிகாரிகளால் தொல்லை, இதிலிருந்து விடுவித்து வணிகர்கள் சுதந்திரமாக வணிகம் செய்ய வேண்டும் என்பதற்காக தான் விடுதலை முழக்க மாநாடு என்பதை வைத்து இருக்கின்றோம்.

  இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்க நிர்வாகிகள் பல லட்சம் வணிகர்களை ஒன்று திரட்டி கொண்டிருக்கிறார்கள். இந்த மாநாட்டிற்கு பிறகு வணிகர்களுக்கு ஓர் திருப்புமுனை ஏற்படும்.

  கண்ணகி நீதி கேட்ட மண் மதுரை மண், அந்த மண்ணிலே நாங்களும் வணிகர்களுக்காக, நீதி கேட்கிறோம், மேலும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு வணிகர்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு செல்ல அனுமதி வழங்க வலியுறுத்தினோம், அதனை தொடர்ந்துஅழுத்தம் தரப்பட்டு வணிகர்களுடைய பணத்தை பறிக்க கூடாது என்பதை தெளிவாக சொல்லி இருக்கின்றோம்.

 அதிலிருந்து வணிகர்கள் ஓரளவிற்கு மீண்டு கொண்டு இருக்கிறார்கள், அதே போன்று ஜீன் 4 வரை சட்டம் நிலுவையில் இருந்தாலும், தளர்வுகள் செய்ய வேண்டும் என்ற பேரமைப்பின் கோரிக்கையை ஏற்று, தமிழகம் முழுவதும் தளர்வுகளை தந்து இருக்கிறார்கள்.

 வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் டெல்லியில் இந்தியாவின் தலைமை  தேர்தல் ஆணையரை சந்தித்து முறையிட்டு, பல்வேறு தீர்வுகளை காண கூடிய சூழலை அரசு இடத்திலும் காண இருக்கின்றோம்.

  ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்க்கொள்ள வர்த்தகர்கள் தயாராக இருக்கிறார்கள், அதே போன்று கார்ப்பரேட் கம்பெனியின் கடுமையான நெருக்கடியை எங்களது வணிகர்கள் தாக்குபிடித்துக்கொண்டு இருக்கிறார்கள், சங்கிலி தொடர் விற்பனையாளர்கள், உரிமையாளர்கள் தனி விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

  ஆகவே தான் 41 ஆவது மாநில மாநாட்டில் மாநில, அரசு மத்திய அரசு சிறப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு , சாமானிய வணிகர்களை பாதுகாக்க சிறப்பு பிரகடனங்களை, சிறப்பு சட்டமாக ஏற்றவேண்டும் என்பதை நாங்கள் அறிவிக்கின்றோம் என தெரிவித்தார்.

 இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.