கைதானவரின் குடும்பத்தை சந்தித்த பாமக வேட்பாளர் பாலு!

ஜி.கே.சேகரன்,
அரக்கோணம் சித்தேரியில் தேர்தல் தினத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக பாமக பொறுப்பாளர் கைது - அவரின் குடும்பத்தினர் அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு நேரில் சந்தித்து ஆறுதல் கைதானவரை சிறையிலிருந்து விடுவிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பாமக வேட்பாளரான வழக்கறிஞர் பாலு உறுதியளித்தார்.
19 ஆம் தேதி அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு நடைபெற்ற போது அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி வாக்குப்பதிவு செய்யும் இடத்திற்கு கட்சிக்கொடி அணிந்து காரில் வந்துள்ளார். தேர்தல் விதிமுறைக்கு மீறி வாக்குப்பதி மையத்திற்கு எப்படி வரலாம் என அப்பகுதியில் பாமகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதனால் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது போலீசார் சமரசம் பேசி அனுப்பி உள்ளனர். வினோத் காந்தியின் சார்பில் சித்தேரியை சேர்ந்த பாமக கிளை பொறுப்பாளர் வைரமுத்து மீது புகார் மனு அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் வைரமுத்து கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சிறையில் உள்ள பாமக பொறுப்பாளர் வைரமுத்து குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சட்ட ரீதியாக வைரமுத்துவை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வைரமுத்துவின் குடும்பத்தினரிடம் உறுதி அளித்தார்.