13,406 காவல் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்!

13,406 காவல் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்!

   ம.பா.கெஜராஜ்,

 தமிழக காவல் துறையில் மொத்தம் 13,406 போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

 இதனால் ஏற்கனவே பணியில் உள்ள போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

 தமிழக போலீஸ் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் கான்ஸ்டபிள் முதல் எஸ்.ஐ.வரை தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

  இப்படிப்பட்ட தேர்வில், உடல் தகுதி, எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் லோக்கல் ஸ்டேஷன்,ஆயுதப்படை,பட்டாலியன் ஆகியவற்றுக்கு நியமிக்கப்படுகின்றனர்.

 அதே போல் மத்திய மற்றும் மாநிலத்தில் காவல் அதிகாரிகளுக்கென தேர்வுகள் தனியாக நடத்தப்படுவது வழக்கம்.

 தமிழகத்தில், 14 டி.ஜி.பி.,க்களும், 17- ஏ.டி.ஜி.பி.,க்களும் பணியில் உள்ளனர்.  அப்படியிருக்க, காலியாகும் உயர் அதிகாரிகள் பணியிடங்கள் அவ்வபொழுது நிரப்பப்படுகின்றன.

 ஆனால், கான்ஸ்டபிள் வரையிலான பணியிடங்கள் பற்றாக்குறையாக இருப்பினும் அதை நிரப்புவதில் உடனடி நடவடிக்கை இல்லாமல் உள்ளது என்றே பார்க்கப்படுகிறது.

  2021 ஜூலை கணக்கெடுப்பின்படி 13,406 ம் பணியிடங்கள் காலியாக உள்ளதால், டுயூட்டி போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமையும், மனஅழுத்தமும் உண்டாகிறது.

 இதன் காரணமாக டி.ஜி.பி.,முனைவர் சி.சைலேந்திரபாபு இ.கா.ப. அவர்கள் அறிவித்துள்ள வாரவிடுப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த இயலாதபடி உள்ளது.

  ஆகவே விரைவில் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது காவலர்களின் கோரிக்கையாக உள்ளது.