ரவுடி போலிசாரால் சுட்டுக் கொலை!

ரவுடி போலிசாரால் சுட்டுக் கொலை!

 கே.ஏ.ஜெகதீஷ்வரி, 

  கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஒருவனை போலிசார் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

 தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி திருமலையா புரத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் துரைமுருகன். தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் துரைமுருகன் மீது 7 கொலை வழக்கு உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

  தலைமறைவாக இருந்து வந்த துரைமுருகனை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

   அப்போது, முள்ளைக்காடு, முத்தையாபுரம் பொட்டலட்காடு பகுதியில் துரைமுருகன் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

   இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை பிடிக்க நெருங்கிய போது அரிவாளால் தாக்கி தப்பமுயன்ற துரைமுருகன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம்.

 சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், டவுன் டிஎஸ்பி கணேஷ், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதபடிக்கு, தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் திருமலையாபுரம் பகுதிகளில் போலீசார் நிற்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.