நான்கு பேரை கொன்ற டி -23 புலி உயிருடன் பிடிபட்டது! மைசூரு "சூ" வுக்கு பயணம்!

நான்கு பேரை கொன்ற டி -23 புலி உயிருடன் பிடிபட்டது! மைசூரு "சூ" வுக்கு பயணம்!

  அ.ராகுல்

  21 நாள் வேட்டைக்குப் பிறகு புலி டி -23 உயிருடன் பிடிக்கப்பட்டது

சமீபத்தில் நான்கு பேரை கொன்ற புலியை கண்டுபிடித்து பிடிக்க தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்தது.

 நான்கு பேரை கொன்ற டி -23 என்ற புலி உயிருடன் பிடிபட்டது.  நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் 15 வெள்ளிக்கிழமை தமிழக வனத்துறையால் புலியை வேட்டையாடிய வனத்துறை அதிகாரிகள் இறுதியாக அதை கைப்பற்றினர்.

 நீலகிரியின் மசினகுடியில் உள்ள மயூர் வனப்பகுதியில் கலக்கி வந்த டி -23 புலியை கண்டுபிடிக்க 21 நாள் தேவைபட்டது.

 நேற்று வியாழக்கிழமை இரவு, தெப்பக்காடு பகுதியில் டி -23 புலியின் நடமாட்டத்தை ஐ வன அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

 அதனைத் தொடர்ந்து புலியை இரண்டு மயக்க மருந்து குண்டுகளால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆயினும், புலி காட்டுக்குள் தப்பியது. இதனால் வன அதிகாரிகள் ஏமாந்தனர். ஆகவே இன்று வெள்ளிக்கிழமை காலை புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டினர்.

 தொடர்ந்து பிற்பகல், மாசினகுடியில் உள்ள மாயர் பகுதியில் டி -23 காணப்பட்ட நிலையில் மூன்றாவது மயக்க மருந்து துப்பாகி குண்டால் சுட்டு, அதிகாரிகள் அதை கைப்பற்றினர்.

  இந்த நடவடிக்கையின் போது ஒரு வன ஊழியர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. முதுமலை தெப்பக்காடு யானை முகாமிற்கு டி 23 புலியை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 நீலகிரியில் மனிதனை உண்ணும் புலி உயிருடன் பிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

 அக்டோபர் 1 ஆம் தேதி, தமிழ்நாடு தலைமை வனவிலங்கு வார்டன் கூடலூரில் நான்கு பேர் மற்றும் பல கால்நடைகளைக் கொன்ற டி -23 ஐ வேட்டையாடவோ அல்லது கொல்லவோ உத்தரவு பிறப்பித்தார்.

 பின்னர் அக்டோபர் 5 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் புலியை கொல்ல வேண்டாம் என்று மாநில வனத்துறைக்கு உத்தரவிட்டதை அடுத்து, அதை உயிருடன் பிடிக்குமாறு கூறியது.

 கால்நடை உரிமைக் குழுவான பீப்பிள் ஃபார் கால்டு இன் இந்தியா (பிஎப்சிஐ) தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வனவிலங்குகளுக்கு அடிக்கடி நடமாடுவதால் ஆபரேஷனுக்காக குறைந்த பணியாளர்களை ஈடுபடுத்துமாறு முதன்மை தலைமை வன பாதுகாவலருக்கு உத்தரவிட்டது.

 புலியை வேட்டையாடுவதற்கான உத்தரவு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் பிரிவு 11 (1)-ன் கீழ் வழங்கப்பட்டது - இது சட்டத்தின் அட்டவணை 1 இன் கீழ் வரும் எந்த விலங்கையும் கொல்ல அல்லது வேட்டையாட தலைமை வார்டனுக்கு அனுமதி அளிக்கிறது. இதில் புலிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது!

பிடிபட்ட டி 23 புலி மைசூரு வனவியல் பூங்காவிற்கு கொண்டு சென்று அங்கு பராமரிக்கப்படும்.