28 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:- எங்கே?
தாம்பரம்.முரளி,
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28.07.2022 ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. அதற்காடு முன்னேற்பாடுகளை அரசு செய்துள்ளது.
இந்நிலையில் அன்றைய தினம் (28.07.2022) வியாழக்கிழமை சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கும்படி அரசு முதன்மை செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் குறிப்பில் கேட்டுக் கொண்டிருந்தார்.
மேற்காணும் கோரிக்கையை அரசு பரிசீலித்து, 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க நாளான 28.07.2022 ஆம் தேதி சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் அடுத்த மாதம் 27.08.2022 ஆம் தேதி மேற்படி மாவட்ட பள்ளி கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளில் அரசு அத்தியாவச துறைகள் இயங்கும் என்று அரசு செயலாளர் ஆர்.ஜந்நாதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.