நீதித்துறை சார்ந்த வழியில் பயணித்தால் பேசக்கூடிய அளவிற்கு உயரலாம்! நீதியரசர் ஆர்.மகாதேவன் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,

 வாழ்க்கை பாதை வேறு திசையில் இட்டுச்சென்றாலும், நீங்கள் நீதித்துறை சார்ந்த வழியில் பயணித்தால் உங்களில் சிலர் இதே போன்ற என்ட்ரோல்மென்டில் அறிவுறைகள் வழங்கும் வாய்ப்பு கிட்டும் என சென்னை உயர் நீமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் பேசினார்.

வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்வு சென்னை பார்கவுன்சில் சார்பாக நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மொத்தம் 1150 வழக்கறிஞர் மாணவ மாணவியர் பதிவு பெற்றனர். இதில் பார்கவுன்சிலின் சேர்மன் திரு.பி.எஸ்.அமல்ராஜ், துணை சேர்மன்கள் வி.கார்த்திகேயன்,எஸ்.பிரபாகரன், மோகனகிருஷ்ணன், கமிட்டி தலைவர் பாலு, மூத்த வழக்கறிஞர்கள் ஓம்பிரகாஷ், விடுதலை,(முன்னாள் அட்வகேட் ஜெனரல்) ஆன்டனிராஜ் மற்றும் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் கலந்துக் கொண்டு புதிய வழக்கறிஞர்களுக்கு பல்வேறு விதமான வழிகாட்டுதல்களை எடுத்துரைத்தார்.

 அப்போது அவர் குறிப்பிடுகையில், அனைவருக்கும் வணக்கம்,இறுதியாக பேச இருப்பவருக்கு வரக்கூடிய சிரமங்களை இப்போது பார்க்கப் போகிறீர்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்திலோ, தமிழ்நாடு சார்ந்த நீதிமன்றங்களிலோ வழக்கறிஞர்களாக பதிவு செய்வது இந்திய அளவிலே ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்பட்ட காலம் உண்டு.

 மெட்ராஸ் ஹை கோர்ட் லாயர் என்று சொன்னால் இந்திய அளவிலே ஆகச் சிறந்த லாயர்கள் என்று போற்றப்பட்ட காலம் ஒன்று உண்டு.

இன்றளவும் அது தொடர்ந்து வருகிறது.

உங்களுக்கு ஒரு சிறு குறிப்பை தான் சொல்ல விரும்புகிறேன்.

  1402-ல் ஷேக்ஸ்பியரின் ஹென்றி ஃபோர் நாடகத்தில் அமைக்கப்பட்ட கதை அம்சம் விஷயத்தைப் பார்த்தால், நாடகத்தில் கிளர்ச்சி செய்யக்கூடியவர்கள் நாட்டில் உள்ள அதிகாரத்தை கைப்பற்றி அந்த அதிகாரத்தின் மூலம் தங்களுடைய அனைத்து உணர்வுகளையும் நியாயப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். 

   அந்த குழப்பத்தை விளைவிக்கக்கூடிய அந்த கிளர்ச்சியாளர்கள் அந்த சமயத்திலே இப்படி குறிப்பிடதாக ஷேக்ஸ்பியர் எழுதியுள்ளார்.

   கிளர்ச்சியாளர்களுடைய கூற்று "லெட் அஸ் ஸ்கில் ஆல் லாயர் ஆர் இன் லா மேன்".நினைத்து பாருங்கள் இது எதிர்மறையாக கூற்று இல்லை.

 த கிராண்ட் சன் ஆஃப் மகாத்மா காந்தி என்கிற புத்தகத்தில் மகாத்மா கொலை நடந்த விஷயத்தையும்,அந்தக் கொலைக்கான காரணங்கள் தெளிவாக அலசி ஆராய்ந்தும், அந்த வழக்கு நடத்தப்பட்ட விதம், அந்த வழக்கில் அதிகாரபூர்வமான ஆஜரான வழக்கறிஞர்களின் பாங்கு, வழக்கிலே எடுத்துவைக்கப்பட்ட பாங்கு, இதெல்லாம் ஒரு வழக்கறிஞர் என்ன விதத்தில் வழக்கை நடத்த வேண்டும் என்பதை குறிப்பிட்டிருப்பார்கள். இதுவும் எதிர்மறையான விஷயம் அல்ல.

   அரசியல் அமைப்புச் சட்டத்தையும், சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய வாதங்களையும், கடைபிடிக்கப்பட வேண்டிய கடமை வழக்கறிஞர்களுக்கு உண்டு.

 இந்திய முழுவதிலும் ஆளச்சிறந்த வழக்கறிஞர்களாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்து வருகிறார்கள்.

 வழக்கு சம்மந்தப்பட்ட புத்தகங்களை எடுத்து பார்த்தீர்களானால், புகழ்பெற்ற வழக்குகளாக அறியப்பட்ட விவரங்களைப் பார்த்தால் சென்னையில் வாதாடப்பட்ட வழக்கு அதில் இடம்பெற்றிருக்கும்.

 வழக்கறிஞர்களாக பதிவு பெற்ற நீங்கள், சீனியர் வழக்கறிஞர்களிடம் சேர்ந்து வழக்கு பற்றின விவரங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து நீங்கள் சட்டபணிகள் தொடர்புடைய பணிகளில் இணைத்துக் கொள்ளலாம். போட்டிகள் நிறைந்த இந்த காலகட்டத்தில் வழக்கறிஞர்களாகிய நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொறு நாளையும், அதன் முக்கியத்துவத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

 நீங்கள் உயர் நீதிமன்றத்திலோ அல்லது மாவட்டம் மற்றும் ஏனைய நீதிமன்றங்களில் பயிற்சியை துவங்கும் போது அங்குள்ள ஒவ்வொறு நீதிமன்ற அறையையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 உயர் நீதிமன்றத்திலே பயிற்ச்சி பெறுபவர்கள் காஸ்லிஸ்ட்டை கையால கற்றுக் கொள்ள வேண்டும்.

 அதே போல் வழக்குகளை எதற்காக தாக்கல் செய்கிறார்கள் என்று அடிப்படை விஷயங்களை அறிந்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் ஃபாலிஸ் நாரிமன் எழுதிய "பிபோர் மெமரி பேட்ஸ்" என்கிற புத்தகத்தை படிக்க வேண்டும். சிறந்த வழக்கறிஞர்களாக உருவாவதற்கு, அடிப்படையாக நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன என்பதை பற்றின குறிப்புகளை அதில் தந்திருப்பார்.

உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கை எப்படி நடத்துவது, வழக்கின் சாரம்சத்தை அலசி ஆராய்ந்து பார்த்த பின்னர் நீங்கள் நீதிமன்ற அறைக்குள் செல்லவேண்டும் என்பதும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு தொடர்புடைய தீர்ப்புகளை படித்து பார்த்துவிட்டு, வழக்கின் தன்மையை வாசித்துவிட்டு நீங்கள் நீதிமன்ற அறையில் பேசுவீர்களானால் நீதிமன்றத்தில் உங்கள் மதிப்பு கூடும்.

நீங்கள் வழக்கை தவிர்த்து, வழக்குக்கு அப்பால் உளளதை நீதிமன்றத்தில் முன் வைக்கக்கூடாது.

 உங்களிடம் வாதாடக்கூடிய வழக்கறிஞர் இறுதிவரை உங்களோடு இதே நீதிமன்றத்தில் பணியாற்றப்போகிறார். ஆகவே வழக்கில் இல்லாதத்தையோ, தவறான சொல்லாடல்களையோ நீங்கள் பயன்படுத்தக்கூடாது.

 வழக்கின் சாரம்சத்தையும், வாதங்களையும் குறைந்த நேரத்தில் நீங்கள் பதிவு செய்யக்கூடிய அளவுக்கு உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும் வேண்டும்.

 ஒரு வழக்கில் உங்களால் எடுத்துக் ஆளக்கூடிய மேற்கோள், ஒரு வழக்கில் முடிந்ததாக இருந்தால், அந்த வழக்கு உயர்நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ (செட்டசைட்) மாற்றியமைக்கப்பட்டிருந்தால் அந்த குறிப்பை தவறுதலாக்ககூட வழக்கில் ஏற்று சொல்லக்கூடாது.

 நீதிபதிகள்கூட உங்களைப்போல மனிதர்கள் தான். அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு. சில சமயங்களிலே நீதிபதிகள் வழக்கறிஞர்களிடம் சற்று கடுமையாக நடந்துக் கொள்ளும் சூழல் வரலாம். அந்த இடத்திலே அதிகபட்ச பொறுமையை காக்க வேண்டியது வழக்கறிஞர்களாகிய உங்களின் கடமை.

நீதிமன்றங்களில் உங்களுக்கு முன் வழக்கறிஞர்கள் எப்படியெல்லாம் வாதாடினார்கள், நிபுணத்துவம் பெற்றார்கள் என்பதை தினம் தினம் கற்க வேண்டும்.

நீங்கள் நாற்பது ஆண்டுகள், 15 ஆயிரம் நாட்கள் வழக்கறிஞர்களாக இருப்பீர்கள். இந்த நாட்களில் உங்களை நீங்கள் எப்படியெல்லாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும், நிபுணத்துவம் பெற வேண்டும் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்.

 உங்களை வாழ்க்கை பாதை வேறு திசையில் இட்டுச்சென்றாலும், நீங்கள் நீதித்துறை சார்ந்த வழியில் பயணித்தால் உங்களில் சிலர் இதே போன்ற என்ட்ரோல்மென்டில் அறிவுறைகள் வழங்கும் வாய்ப்பு கிட்டும். உங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு உங்கள் உடனிருப்பவர்ளுலுக்கு கிடைத்தால் மனம் தளரக்கூடாது.

 ஆபிரகான் லிங்கன் பள்ளிக்கு செல்லவில்லை என்றாலும் கூட பின்னாளில் அமெரிக்க ஜனாதிபதியானார்.அதே போல் சிறந்த வழக்கறிஞராகி இந்த மண்ணைவிட்டுச்சென்றார். அது போன்றவர்களைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும்.

  அவர்கள் சந்தித்த சோகங்களை புறம்தள்ளி அவர்கள் சந்தித்த சவால்களை பற்றி அறிதல் வேண்டும். நீங்கள் இப்படி பணியாற்றினால் இந்த நாட்டில் நன்கு அறியப்படக்கூடியவர்களில் ஒருவர் ஆவீர் என்று பேசினார்.

  இந்த என்ட்ரோல் மென்ட்டைக் காண ஆயிரக்கணக்கான பெற்றோர் குழுமியிருந்தனர்.மேலும் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியின் மாணவர்கள் ஜி.சுரேஷ் மேத்யூ ராஜ், அ.பிரின்ஸ், பி.எஸ்.சக்திதரன்,ம.தமிழ்செல்வன்,எம்.மனோஜ் பிரபு, ஆர்.ஐ.விக்ரமன் அ.அரவிந்தன்,கோ.சிந்து, உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழக்கறிஞர்களாக பதிவு பெற்றனர்.

  குறிப்பு:-இந்த என்ட்ரோல் மென்டில் பங்கேற்ற மாணவர்கள் பலர் தாடியுடன் வந்திருந்தனர். அவர்களையும், லெக்கின்ஸ் அணிந்து வந்த பெண்களையும் அரங்கினுள் அனுமதிக்கவில்லை. இத்தனைக்கும் இது பற்றின அறிவுரை ஏற்கனவே வழங்கப்பட்ட்டிருந்தும் அவர்கள் அதை பின்பற்றாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  பின்னர் மேற்படி மாணாக்கள் அவசர கதியில் வெளியேறி தங்களை தயார்படுத்திக் கொண்டு வந்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.