ஒரு குடும்பத்தை பாதுகாப்பதற்காக ஊரடங்கு சட்டமா? கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
இலங்கை அரசாங்கத்தின் அவசர நிலைப் பிரகடனம்,சமூக ஊடகங்கள் மீதான தடை, ஊரடங்கு, சமூக ஊடகங்கள் மீதான தடை போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் ஒரு குடும்பத்தை பாதுகாப்பதற்காக ஊரடங்கு சட்டமா என்று கோஷங்களை எழுப்பினர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
எந்தவித காரணங்களும் இன்றி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்து, அவசரகால சட்டத்தை அமல்படுத்திது, சமூக வலைத்தளங்களை முடக்கியது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது உள்ளிட்ட பல காரணங்களை முன்னிலைப்படுத்தி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
''ஆட்சியாளர்கள் அவசரகால சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து, ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து, சமூக வலைத்தளங்களை முடக்கி, இன்று இந்த நாட்டு மக்களுடைய ஜனநாயக உரிமைகளை பறிப்பதற்காக எடுக்கின்ற இந்த நடவடிக்கையை எதிர்த்து போராட்டக்காரர்கள் கடுமையாக குரல் கொடுத்தார்கள்.
பொதுவாக அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு 10 நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும். அதன் பிறகு தான் அதனை நாடு முழுவதும் பிரகடனப்படுத்த முடியும் என்கின்ற ஒரு சட்டம் இருக்கின்றது. என்று சொல்லும் போராட்டக்குழு, இன்று இலங்கை மக்கள் வாழ வழியில்லாமல், உண்ண உணவு இல்லாமல், இன்று தங்களுடைய வாகனங்களுக்கு எரிபொருள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றோம்.
மாணவர்க பரீட்சை வினாத் தாள்கள் கூட அச்சடிக்க முடியாத நிலைக்கு அரசாங்கம் திவாலாகியிருக்கிறது.
''இந்த நாட்டிலே ஜனநாயகம் மீறி, இந்த நாட்டு மக்களுக்கு எதிராக ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கின்றது. எதற்காக ஊரடங்கு சட்டம்? ஊரடங்கு சட்டம் நாட்டிலே பிரகடனப்படுத்த வேண்டும் என்றால், அது மக்களை பாதுகாப்பதற்காக இருக்க வேண்டும்.
ஆனால் இங்கு ஒரு குடும்பத்தை பாதுகாப்பதற்காக இந்த ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
நாட்டிலே போரா நடக்குது? போர் நடக்காமல் இன்றைக்கு அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி, ஒரு குடும்பத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக 2 கோடிக்கு மேற்பட்ட மக்களுடைய வாழ்வை ஒரு கேள்விக்குறியாக்கியிருக்கின்றது.
என்று ராஜபக்சே குடும்பத்தினரை போராட்டக்காரர்கள் விளாசுகிறார்கள்.