ஒப்பந்ததாரருடன் கைகோர்த்த அரசு பொறியாளர்! லஞ்சமோ லஞ்சம்!

ஜி.கே.சேகரன்,
கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து பணிகளும் பொறியாளர் யோகவேல் ஒப்பந்ததாரருடன் கைகோர்த்து கொண்டு முறைகேட்டில் ஈடுபடுகிறார், ஒன்றிய குழு கூட்டத்தில் காரசார விவாதம் ஒன்றிய கவுன்சிலருக்கோ ஒன்றியதலைவருக்கோ எந்த தவகலும் தெரிவிப்பதில்லை என குற்றச்சாட்டு பாமக வெளிநடப்பு- அதிமுக வாயில் கருப்பு துணி கட்டி கடும் எதிர்ப்பு.
வேலூர் மாவட்டம்,கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியதலைவர் திவ்யா தலைமையில் நடைபெற்றது, இதில் துணை தலைவர் சக்கரவர்த்தி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சரமாரியாக பொறியாளர் மீது குற்றச்சாட்டை கூறினார்கள். தங்கள் கிராமத்தில் தங்களுக்கே தெரியாமல் அரசின் பணிகள் நடப்பதாகவும் ஒன்றிய குழுவாக தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு கிராம சபைக்கு கூட அழைப்புவிடுப்பதில்லை.
இதே போல் ஒன்றிய குழு தலைவருக்கும் தெரிவதில்லை ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு எந்த தவலும் தெரிவிக்காமல் யோக வேலு என்பவர் ஒப்பந்ததாரருடன் டீல் பேசி முடித்துவிட்டு மன்ற உறுப்பினர்களுக்கே தெரியாமல் அவரே பணிகளை ஒப்பந்ததாரருடன் செய்கிறார்.
இதில் பல்வேறு முறைகேடுகள் உள்ளது, இவரை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய வேண்டும். ஒரே அளவுள்ள பள்ளிகளை இடிக்க ஒரு இடத்தில் ரூ.44ஆயிரம். மற்றும் ரூ.51 ஆயிரம் எனவும் வேறு ஒரு இடத்தில் பணம் கொடுத்தவர்களுக்கு ரூ.1. 10 லட்சம் வழங்க பில் பாஸ் செய்கிறார்.
இவ்வாறு செய்வது முறைகேடாகும் என கூறி பாமக கவுன்சிலர்கள் வேலாயுதம் மற்றும் ஜெயலட்சுமி ஏழுமலை ஆகியோர் தங்களின் கருத்துக்களை கூறிவிட்டு வெளிநடப்பு செய்தனர்.
இதே போன்று அதிமுக உறுப்பினர் விஸ்வநாதன் என்பவர் வாயில் கருப்பு துணியை கட்டி கொண்டு அதிகாரிகள் அரசு பணத்தை வீணடிக்கிறார்கள் குறிப்பாக 20 குடும்பங்கள் உள்ள இடத்தில் ரூ. 8. 90 லட்சம் செலவில் குடிநீர் தொட்டி அமைக்கிறார் அந்த இடத்தில் அவ்வளவு பெரிய நீர் தேக்க தொட்டி தேவையில்லை.
ஆனால் பள்ளிக்கு அருகில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இல்லை இப்படி முறைகேட்டில் ஈடுபடும் பொறியாளர் யோகவேலுவை ஏன் மாற்றவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் ஒன்றிய குழு தலைவர் திவ்யாவுக்கு எந்த விவரங்களையும் இவர் தெரிவிக்கவில்லை இந்த ஒன்றியத்தை பொறுத்தவரையில் அதிகாரிகள் முழு அதிகாரத்தை செலுத்துவதாகவும் மன்ற உறுப்பினர்கள் எந்த தகவலையும் தெரிவிப்பதில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.