டிஜிபியிடம் ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி பெற்ற வேலூர் சரக தனிப்படையினர்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

  தமிழ்நாட்டு டிஜிபியிடம் வேலூர் சரகத்துக்குட்பட்ட திருவண்ணாமலை மாவட்ட தனிப்படை போலீசார் ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி பெற்றனர்.

  இது பற்றின விவரம் வருமாறு,

 திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளிஆசிப் ஜாவித்.

 இவனை திருவண்ணாமலை மாவட்ட தனிப்படையினர் கடந்த ஒரு மாத காலமாக புதுடெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேஷ், அசாம் ஆகிய மாநிலங்களில் தேடி வந்தனர்.

 இந்நிலையில் நேற்று முன் தினம் அவன் ஹரியானா ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட தனிப்படையினர் அதிரடியாக துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர்.

  அப்போது அவரிடமிருந்து  ரூபாய் 15 லட்சம் ரொக்க பணம் மற்றும் மாருதி ஸ்விப்ட் கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவனை விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து காவல் வாகனம் மூலம் திருவண்ணாமலை அழைத்து வந்தனர்.

  இந்த வீரதீர செயலை அறிந்த தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட தனிப்படையினருக்கு ஒரு லட்ச ரூபாய் வெகுமதி அளித்து பாராட்டினார்.