ரோப் கார் பணிகளை முடுக்கிவிட்ட அமைச்சர் ஆர்.காந்தி!

ரோப் கார் பணிகளை முடுக்கிவிட்ட அமைச்சர் ஆர்.காந்தி!

கு.அசோக்,

  சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் ரூ.11 கோடி மதிப்பில் நடைபெறும் ரோப்கார் பணிகள்மற்றும் அடிப்படை வசதி கட்டிட பணிகளையும் ஆய்வு செய்து அமைச்சர் ஆர்.காந்தி பாண்டிய நல்லூரியில் நியாயவிலைக்கடையையும் திறந்து வைத்தார்.

 இராணிப்பேட்டை மாவட்டம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் 11 கோடி மதிப்பில் நடைப்பெற்று வரும் ரோப்கார் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதி கட்டுமான பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  ஆர்.காந்தி, எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

     இதே போன்று சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் ஊராட்சியில் பாணாவரம் கூட்டு ரோடு பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா  ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணிரகுராம்ராஜ் தலைமை தாங்கினார். இதில்  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்   ஆர்.காந்தி, அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன், ஆட்சியர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு பகுதி நேர ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர். தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி ரேஷன் விநியோகத்தை தொடங்கி வைத்தனர்.

   அப்போது மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நாகராஜு, ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் ,டிஎஸ்ஓ வெங்கடேசன், வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ஜெயகோபி, டிஆர்ஓ சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.