சென்னை வெள்ளத்தை தடுக்க புதிய ஐடியா! வல்லுநர் குழு!

எஸ்.அபிஷேக் ஸ்டீவ்,
வடிகால் கால்வாய்களில் செய்யப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், அப்போதுதான் சென்னைக்குள் புகும் வெள்ளம் கட்டுப்படுத்தப்படும் என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவினரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள்.
மழை வெள்ள சேதத்தை தடுப்பது எப்படி? என்பது குறித்து ஆராய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.
மேற்படி,குழுவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி தீவிரமாக ஆராய்ந்து இடைக்கால அறிக்கை ஒன்றை தயாரித்தனர்.
இந்நிலையில் அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வல்லுனர் குழுவினர் இன்று வழங்கினர். அதில், "மழை வெள்ளத்தை தடுக்க தற்காலிகமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், நிரந்தரமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சென்னை புறநகர் பகுதியில் வடிகால் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வடிகால்களை அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு யோசனைகள் அதில் கூறப்பட்டுள்ளதாம்.