அரசு பேருந்தில் கட்டு கட்டாக பணம்

க.பாலகுரு,
உரிய ஆவணம் இன்றி அரசு பேருந்தில் 12 லட்சத்து 85 ஆயிரம் எடுத்துச் சென்ற நபரிடம் வருமானவரி துறையினர் விசாரணை.
திருவாரூர் மாவட்டம் அரசுபேருந்தில் கட்டுகட்டாக சிக்கிய.. 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர். வருமானவரிதுறையிடம் ஒப்படைத்தனர்.
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு சோதனை சாவடிகளில் காவல்துறையினர் இருசக்கர வாகன முதல் நான்கு சக்கர வாகனம் மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என மாவட்டம் முழுவதும் காவல் சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட கொல்லுமாங்குடி அருகே கீரனூர் காவல் சோதனை சாவடியில் தலைமை காவலர் கிறிஸ்துவராஜ் புஷ்பா ஆகிய இருவரும் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்பொழுது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல நாகை பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் வயது 47 என்பவரின் பேக்கை திறந்து பார்த்ததில் அதில் கட்டு கட்டாக 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது.
இதற்கு உரிய ஆவணம் இல்லாததால் காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் 10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யும் பணம் தேர்தல் விதிப்படி வருமானவரிதுறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால் இந்த பணத்தை காவல்துறையினர் ஒப்படைத்தனர்