ரமலான் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்! பழச்சாறு கொடுத்த இந்துக்கள்! வாக்கு சேகரித்த அரசியல் கட்சிகள்!

 ஜி.கே.சேகரன்,

வேலூர்

 வேலூர் மாவட்டம், வேலூர் ஆர்.என்.பாளையத்தில் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகையானது நடந்தது. அப்போது ஒருவரை ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர் மேலும் சிறப்பு தொழுகையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினார்கள் ஈகை திருநாளை முன்னிட்டு நோன்பிருந்து இன்று ரம்ஜானை அவர்கள் கொண்டாடினார்கள்.

 இதே போன்று காட்பாடி, கொணவட்டம், சத்துவாச்சாரி குடியாத்தம், பேர்ணாம்பட்டு, போன்ற இடங்களிலும் ரம்ஜான் தொழுகை நடந்தது இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினார்கள்

 

வாணியம்பாடி

வாணியம்பாடி  ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் பண்டிகை  சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துக் கொண்டனர்.

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி  ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஈத்கா மைதானத்தில் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர்.  தொழுகை முடிந்து பின்னர்  ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி ஈகை பெருநாளின் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் புத்தாடை உடுத்தி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

 திருப்பத்தூர்

திருப்பத்தூரில்  ஈத்கா மைதானத்தில் உள்ள பூர்ணா மசூதியில்   2ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகை காரணமாக தொழுகை! ஜூஸ் கொடுத்து நட்பு பரிமாறி கொண்ட இந்துக்கள்.

  இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகிய இரண்டு பண்டிகைகள் மட்டுமே முக்கிய பண்டிகைகளாக, பெருநாளாக கொண்டாடப்படுகிறது.

   இதன் ஒரு பகுதியாக இன்று ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகைய காரணமாக திருப்பத்தூரில் உள்ள ஈத்கா  பூர்ணா மசூதியில்  சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர்.

 நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.

 மேலும் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

 பின்னர் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் ஜூஸ் கொடுத்து நட்பு பரிமாறிக்கொண்டனா.

ஆம்பூர்,

   ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப்பள்ளி, மஜ்ஹரும் உலூம் கல்லூரி, துத்திப்பட்டு ஈத்கா மைதானம் மற்றும் சஃபியா மா ஈத்கா கே.எம்.நகர் ஆகிய 4 இடங்களில் தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டு ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் பாதுகாப்பு பணியை ஆம்பூர் டவுன் போலீஸ் உமராபாத் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

   அதனை தொடர்ந்து ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்று திரும்பிய இஸ்லாமியர்களிடம்  திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் திமுகவுக்கும் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி  அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாகவும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.

 

   அதனை தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்றார்.