மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அண்ணன் மகனின் நலம் விசாரித்தார் முதல்வர்!

கு.அசோக்,
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதியின் உடல் நலம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் விசாரித்தார்.
உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அண்ணன் அழகிரியின் மகனான துரைதயாநிதி வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வேலூருக்கு வருகை புரிந்த முதல்வர் மு,.க.ஸ்டாலின் சி.எம்.சி மருத்துவமனைக்கு சென்று துரை தயாநிதியின் நலம் குறித்து விசாரித்தார். அப்போது அவருடன் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஸ்டாலினின் அண்ணான் மு,க,அழகிரி, முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
¢ முதல்வரின் வருகையொட்டி மருத்துவமனை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.