சென்னை சிக்னலில் அதிரடி மாற்றம்! வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி தருமா?

ஜி.சாந்தகுமார்,
மற்ற மெட்ரோ சிட்டிகளைப்போலவே சென்னையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் தான்.
அதை சீர்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநகரின் ஓ.எம்.ஆர், மவுண்ட் - பூந்தமல்லி சாலை, ஈசிஆர், ஜி.எஸ்.டி, தரமணி இணைப்பு சாலை, எஸ்.ஆர்.பி டூல்ஸ் ஜங்ஷன், மியாட் மருத்துவமனை ஜங்ஷன், நுலம்பூர் மெயின் ரோடு - பாரதி சாலை ஜங்ஷன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட முக்கிய ஜங்ஷன்களில் அடாப்டிவ் வகையிலான நவீன சிக்னல்கள் பொருத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த சிஸ்டம் நடைமுறைக்கு வந்தால், 60 செகண்ட் 90 செகண்ட் என நிலையான காத்திருப்பு நேரத்தை காண்பிக்காமல், லைவ் ட்ராபிக்கிற்கு ஏற்ப செகண்ட்கள் மாறுபடும்.
குறிப்பாக, சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் இருந்தால் 120 செகண்ட்கள் வரை சிக்னல்கள் காத்திருக்க செய்யும். அதுவே வாகன நெரிசல் குறைவாக உள்ள சாலைகளில் வெறும் 30 செகண்டில் கிரீன் சிக்னல் விழும்.
அநேகமாக இது சக்ஸஸ் ஆகலாம் என்பதை ஆலோசித்து டெண்டர் கோரப்பட்டிருக்கிறதாம்.
அப்படியானால் நம்ம விஜபிக்கள் எல்லாம் போகும் போது இந்த சிக்னல்கள் எப்படி ரியாக்ட் செய்யுமோ?