மனைவி கட்டினா... மச்சினி இலவசம்?மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்த மாமனார்!

மனைவி கட்டினா... மச்சினி இலவசம்?மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்த மாமனார்!

 ஆர்.ராஜேஷ்குமார்,

மனைவி கட்டினா மச்சினி இலவசம் என்று நினைத்தாரோ என்னவோ ஒருத்தர் அதற்காக அடிபோட்டு தற்போது சிக்கி சிதறிவிட்டார்.

 ஏற்கனவே திருமணத்தை மறைத்த ஒருவர் இளம்பெண்ணை 2-வதாக திருமணம் செய்துக் கொண்டார். அத்தோடு அடங்கிய அவரது ஆசை? அப்படியே மச்சினியை உடலுறுவு கொள்ள ஸ்கெட்ச் போட்டிருக்கிறார்.

  இதையறிந்த அவரது மாமனார், மருமகனை போலீசில் பிடித்து கொடுத்தார்.

   சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் 38 வயதான லோகநாதன். இவர் திருமண தகவல் மையத்தின் மூலம் இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தமக்கு ஏற்கனவே திருமணம் ஆன தகவலை மறைத்துவிட்டார்.

  மேற்படி இரண்டாவது திருமணத்துக்கு பின்னர் முதலிரவு முடிந்ததும்,அவர் அந்த பெண்ணை விட்டு விட்டு  எஸ்கேப் ஆகிவிட்டார்.

   ஏமாற்றம் அடைந்த அந்த புது பெண், கணவர் லோகநாதனை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது ,தனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணோடு திருமணமாகி அதன் மூலம் குழந்தைகள் இருப்பதாகவும் ,இதை பற்றி வெளியே சொன்னால் 'உன்னிடம் உடலுறவு கொண்டதுபோல உன்  தங்கையிடமும் உடலுறவு கொள்வேன்'  என்று மிரட்டி  அவரை கொலை செய்வதாக கூறினார்.

   இதையடுத்து முதல் திருமணத்தை மறைத்து தனது மகளை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட லோகநாதன் மீது அவரின் மாமனார் புகார் அளித்தார்.

   புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லோகநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.