போதை “கள்” விற்றவர் மீது வழக்கு! வேலூர் கலால் போலிசார் நடவடிக்கை!

போதை “கள்” விற்றவர் மீது வழக்கு! வேலூர் கலால் போலிசார் நடவடிக்கை!

  த.மதன்,

 செயற்கை போதை கள் விற்றவர் மீது வேலூர் கலால் போலிசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

 வேலூர் சரக டிஐஜி ஜ.ஆனிவிஜயா,இ.கா.ப. மற்றும் மாவட்ட எஸ்.பி.ராஜேஷ்கண்ணா ஆகியோரின் உத்தரவின் பேரில் கள்ளச்சாராய அழிப்பு பணிகள் நடந்தன.

 அந்த வகையில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் பேபி தலைமையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், அல்லேரி மலையில் 200 லிட்டர் சாராய ஊரலை அழித்தனர். கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காக தயாராக வைத்திருந்த 50 கிலோ வெல்லத்தை கைப்பற்றி அழித்தனர்.

 இந்நிலையில் வெட்டுவனம் பகுதியிலுள்ள சதுரங்க பாளையத்தில் செயற்கை போதைப்பொருள் கலந்த கள் விற்பதாகவும், அதற்காக பல தென்னை மரங்களிலிருந்து கள் இறக்கப்படுவதாக மேற்படி போலிஸ் டீமுக்கு ரகசிய தகவல் வந்தனவாம்.

 அதன் பேரில் அங்கு சோதனையிட்ட போது ஜலகண்டன் என்கிறவர் கள் இறக்கிய போது பிடிபட்டார். அவரிடமிருந்து சுமார் ஐந்து லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஜலகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.