ஸ்டாலின் பெயரில் காளை! வீரர்களை விரட்டி கலக்கல்!

ஸ்டாலின் பெயரில் காளை! வீரர்களை விரட்டி கலக்கல்!

ராஜேஷ் குமார்,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயரில் பாலமேடு ஜல்லிக்கட்டு களத்தில் நின்று விளையாடியதோடு, தனது பக்கத்தில் ஒருவரை கூட விடாமல் முட்டித் தள்ளியிருக்கிறது ஒரு காளை.

 ஜல்லிகட்டு போட்டியில் நண்பகல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காளை என்ற பெயரில் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட மாடு களத்தில் நின்று ரவுண்டு கட்டியது.

 பலரும் காளையை அடக்க முயற்சித்தனர். ஆனால் அந்தக் காளை சுற்றி சுற்றி வீரர்களை சிதறவிட்டு மிரட்டியது.

 இதனால் முதலமைச்சர் ஸ்டாலினின் காளையை  தொட்டாவது பார்க்க வீரர்கள் போராடியும் அதற்கு அந்த காளை இடமளிக்கவில்லை.

 அதே போல நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிடப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் காளையையும் யாராலும் அடக்கமுடியவில்லை.

 அதே போல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் காளையும் வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்தது.