ஓ-இவருதான் கேவிகுப்பம் எம்.எல்.ஏ.வா?

G.K.S.,
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கேவிக்குப்பம் தொகுதி முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும் அரசு மகளிர் கல்லூரியை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி கேவிக்குப்பம் புரட்சிபாரதம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனை கேவிக்குப்பம் புரட்சிபாரதம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தி நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தை கேவிக்குப்பம் தொகுதி முழுவதுமாக விரிவுப்படுத்த வேண்டும், மேலும் அரசு மகளிர் கல்லூரியை கேவிக்குப்பத்தில் ஏற்படுத்த வேண்டும், சித்தாத்தூர் - வேப்பூர் இடையில் கவுண்டன்ய மகாநிதியின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும்.
கேவிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி வட்ட அளவிலான மருத்துவமனையாக மாற்ற வேண்டும் கேவிக்குப்பத்தில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் வடுகந்தாங்கலை தனி குறுவட்டமாக உருவாக்க வேண்டும்.
கொத்தக்குப்பம் -அகரம்சேரி இடையில் பாலாற்றை கடக்க தரைப்பாலம் அமைத்து தரவேண்டும் இராமாலை நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தி உயர்நிலைப்பள்ளியாக்க வேண்டும் குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரியில் படகு குழாம் அமைத்து சுற்றுலாதளமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.
தேர்தலில் வென்ற பின்னர் மக்கள் குறைகளை கேட்டு அறிந்து ஆட்சியரிடம் அவர் அதிரடியாக மனு கொடுத்திருப்பதால் ஓ...இவர் அல்லவா எம்.எல்.ஏ வாக என்று தொகுதிமக்கள் பெருமை பொங்க பேசுகிறார்கள்.