வேலூர் நறுவீ மருத்துவமனையில் ஒரே வாரத்தில் இரண்டு நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சக்சஸ்! முனைவர் ஜி.வி.சம்பத் பேட்டி!

 வேலூர் நறுவீ மருத்துவமனையில் ஒரே வாரத்தில் இரண்டு நோயாளிகளுக்கு  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சக்சஸ்! முனைவர் ஜி.வி.சம்பத் பேட்டி!

ம.பா.கெஜராஜ்,

 கல்லீரல் பாதிக்கப்பட்டு செயலிழந்த இரண்டு நோயாளிகளுக்கு ஒரே வாரத்தில் வேலூர் நறுவீ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் செய்தியாளர்களிடம் சொன்னார்.

      இது சம்மந்தமாக நறுவீ மருத்துவமனையில் செய்தியாளர் கூட்டத்தில் மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் கூறியதாவது:

      அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற ஹென்றி போர்டு மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன் வேலூரில் இயங்கி வரும் நறுவீ மருத்துவமனை மருத்துவ சேவை மற்றும் அறுவை சிகிச்சை செய்வதில் சாதனை படைத்து வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக கல்லீரல் செயலிழந்த இருவேறு நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நோயாளிகளின் வருகை:

   இம்மருத்துவமனை தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இம்மருத்துவமனைக்கு இங்கிலாந்து, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் யு.ஏ.இ, கென்யா, சூடான், மாலத்தீவுகள், மியான்மர், வங்காள தேசம், பூட்டான், உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும்  10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பல்வேறு விதமான அறுவை சிகிச்சைகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அங்கீகாரம்:

மேலும் இம் மருத்துவமனை தொடங்கப்பட்டு குறுகிய காலத்தில் இருதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்கி உள்ளது சிறப்புக்குறியது.

  ஒரே வாரத்தில் இரண்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை:

இதன் தொடர்ச்சியாக இம்மருத்துவமனையில் கல்லீரல் பாதிக்கப்பட்டு செயலிழந்த நோயாளிகள் இருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒரே வாரத்தில் வெற்றிகரமாக செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இருவரில் பெங்களூருவைச் சேர்ந்த 24 வயதுடைய ஸ்மிதா என்ற பெண் பல ஆண்டுகளாக கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகி செயலிழந்து அவதியுற்று இருந்த நிலையில் இம்மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து நலம் பெற்றுள்ளார். இவருக்கு இவரது தாயார் இராஜாத்தி கல்லீரல் தானம் செய்துள்ளார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப்பின் தாதும் மகளும் நலமுடன் உள்ளார்கள்.

            கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட மற்றொரு நோயாளியான 63 வயதுடைய இரவீந்திரன் வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர். இவருக்கு இவரது மனைவி சாந்தி கல்லீரல் தானம் செய்துள்ளார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப்பின் கணவரும், மனைவியும் நலமுடன் உள்ளார்கள் என்று மருத்துவமனை சார்பில் பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

 அதே போல் நறுவீ மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள பல்வேறு நோயாளிகள் பதிவு செய்துள்ளனர்.

 மருத்துவமனைக்கான தேசிய அங்கீகாரம்:

  மேலும், இம்மருத்துவமனை தொடங்கப்பட்டு குறுகிய காலத்தில் என். ஏ. பி. எச் எனப்படும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவைக்கான தேசிய அங்கீகார வாரியம் வழங்கும் அங்கீகார சான்றிதழ், மருத்துவ உபகரணங்களை தொற்று இல்லாமல் சுகாதார முறையில் பராமரிப்பு செய்வதற்க்கான ஊயுர்ழு எனப்படும் மருத்துவ சேவை கூட்டமைப்பின் அங்கீகார சான்றிதழ் ஆகியவற்றை நறுவீ மருத்துவமனை பெற்றுள்ளது பெருமைக்குறியது என்றும் மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தெரிவித்தார்.

 மேலும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் கல்லீரல் தானம் செய்தவர்கள், கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சஞ்சய் கோவில் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆகியோர் செய்தியாளர்கள் கூட்டத்தில் நேரடியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சம்மந்தமாக டாக்டர் சஞ்சய் கோவில் கூறுகையில், கல்லீரல் மாற்று அறுவை சகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு கல்லீரல் தானம் செய்தவர்கள் தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதை நீங்கள் நேரடியாக காணலாம். இவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய 7 - 8 மணி நேரம் ஆனது. உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களின் இரத்த சம்மந்தமான உறவு முறை உள்ளவர்களால் மட்டுமே உறுப்பு தானம் செய்ய முடியும். அரசின் விதிமுறைப்படி மற்றவர்கள் யாரும் உறுப்பு தானம் செய்ய முடியாது.

    மேலும் மது அருந்துவது, சுகாதாரமான உணவு மற்றும் குடிநீர் பயன்படுத்தாமல் இருப்பது, கொழுப்பு சத்துமிக்க உணவை அதிகம் உண்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது உள்ளிட்டவை கல்லீரல் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைகிறது என்றார்.

        இதில் மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நித்தின் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.