ஊரிசு கல்லூரியில் உற்சாகம்!

கு.அசோக்,
வேலூரில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் பயின்ற ஊரீசுக்கல்லூரியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது - மாணவ,மாணவிகள் பேராசிரியர்கள் எழுதுகோலை பரிசாக வழங்கி மரியாதை செய்தனர்.
வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த ஊரீசு கல்லூரியில் தான் முன்னாள் குடியரசு தலைவர் சர்வ பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்று குடியரசு தலைவரானார்.
அவரது பிறந்த நாளே நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது இதனை முன்னிட்டு ஊரீசு கல்லூரியில் பொறுப்பு முதல்வர் ஆனி கமலா ப்ளாரன்ஸ் தலைமையில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
இதில் டாக்டர் ராதாகிருஷ்ணன் திரு உருவ படத்திற்கு கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பேராசிரியைகள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தி ஆசிரியர் தின விழாவை கொண்டாடினார்கள் மேலும் இந்த விழாவில் கல்வி பணியாற்றும் பேராசிரியர்கள் அனைவருக்கும் மாணவ,மாணவிகள் இனிப்புகள் மற்றும் எழுதுகோல்களை பரிசாக வழங்கி மரியாதை செய்தனர்.