மாணவ மாணவிகள் பெற்றோர்களை மதிக்க வேண்டும்!எம்.பி.கதிர் ஆனந்த் பேச்சு!

ஜி.கே.சேகரன்,
மாணவ மாணவிகள் ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும் பெற்றோர்களை மதிக்க வேண்டும் ஆசிரியர்களை எப்போதும் போற்ற வேண்டும்- குடியாத்தத்தில் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கி வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேச்சு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் புதிதாக பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. ரூபாய் 13 லட்சம் மதிப்பில் கட்ட அவரை அடிக்கல் நாட்டை வைத்தார்
பின்னர் குடியாத்தத்தில் உள்ள தட்டப்பாறை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலைஇல்லா மிதிவண்டியை அவர் வழங்கினார். இவ்விழாவில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு குடியாத்தம் நகர் மன்ற தலைவர் சௌந்தர் உள்ளிட்ட திரளானவரும் மாணவ மாணவிகளும் பங்கேற்றனர்.
இந்த விழாவில், வேலூர்நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேசுகையில் தமிழகம் பள்ளிகள் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்து நாட்டிற்கே முன்மாதிரியாக தெரிகிறது. மாணவர்களுக்காக தமிழக அரசு பள்ளியில் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொடர்ந்து மாணவர்களுக்காக திட்டங்கள் செயல்பட்டு அதற்கான அமைச்சர்கள் ஆய்வுகளும் செய்து வருகின்றனர். மாணவ மாணவிகளாகிய நீங்கள் ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும் பெற்றோர்களை மதிக்க வேண்டும். அதேபோன்று நீங்கள் உங்கள் குருவாகிய ஆசிரியர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் அப்போதுதான் வாழ்வில் நீங்கள் முன்னேற முடியும் என்று பேசினார்.