எஸ்.பி.முன் திருந்திய கஞ்சா வியாபாரி! தொட்டால் செத்துடுவோம் என பிள்ளைகள் மிரட்டல்!

ம.பா.கெஜராஜ்,

   எஸ்.பி.முன் ஆஜராகி தான் திருந்தியதாக கஞ்சா வியாபாரி சொன்னார், மேலும் கஞ்சாவை தொட்டால் செத்துடுவோம் என்று அந்த வியாபாரியை பிள்ளைகள் மிரட்டியதாகவும் சொன்னார்.

  இது குறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, 

வேலூர் தொரப்பாடியை சேர்ந்த கஞ்சா விற்பனை செய்து  வந்த நபர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் மனம் திருந்தி வாழ முடிவெடுத்துள்ளார்.

   வேலூர் தொரப்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 39. இவர் வறுமையின் காரணமாக கஞ்சா வியாபாரம் செய்து வந்தார்.

   இவர் மீது பாகாயம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ராஜேந்திரன் மனம் திருந்தி வாழ முடிவு செய்தார்.

   மேலும் வாழ்வாதாரத்திற்காக உதவி செய்யும்படியும் மாவட்ட காவல் துறைக்கு கோரிக்கையும் வைத்தார்.

 அதன்படி  மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  திரு எஸ்.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் தான் மனம் திருந்தியதாக ஒப்புக்கொண்டார்.

  அப்போது கஞ்சாவை யாரும் பயன்படுத்த வேண்டாம். உடல் நலத்திற்கும் அது தீங்கானது. உங்கள் வாழ்க்கையை கெடுத்து விடும் என்று மனம் திருந்தி தெரிவித்தார். மேலும் என் பிள்ளைகள் கான்வென்டில் படிக்கிறார்கள். நான் கஞ்சாவை தொட்டால் அவர்கள் செத்துவிடுவோம் என்று சொல்லிவிட்டார்கள், ஆகவே நான் கஞ்சா விற்கமாட்டேன் என்றார்.

   அவருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் அவரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக வழிவகை செய்து கொடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்து கொண்டார். அபோது எஸ்.பி.இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலிசார் உடனிருந்தனர்.