வாரச்சந்தைகளில் முறைகேடு:- விவசாயிகள் வேதனை!

வாரச்சந்தைகளில் முறைகேடு:- விவசாயிகள் வேதனை!

 கு.அசோக்,

  நீர் நிலைகளில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் மணல்குவாரிகளை மூடி எம்,சாண்ட் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நீர் நிலைகள் பாதுகாக்கப்படும் - மும்முனை மின்சாரம் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் மின் தடுப்பாட்டால் பயிர்கள் பாதிக்கிறது ஆகவே மின் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

 வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

  இதில் வேலூர் மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த விவசாயிகள் அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்றனர் இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில் வாரச்சந்தைகளில் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகளிடம் அதிக அளவு சுங்கம் வசூலிகப்படுவதாகவும் புகார் சொன்னார்கள்.

  மேலும் தமிழக முதல்வர் அறிவித்து செயல்படுத்திய விவசாயிகளுக்கு மும்முனை மின்சார திட்டத்தை அனைத்துவிவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் மேலும் மின் சாரம் அடிக்கடி தடை படுகிறது மின் வெட்டு ஏற்படுகிறது.

 இதனால் விவசாயிகள் பயிரிட்டு நெல் உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து போகிறது எனவே மின் வெட்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் நீர் நிலைகளையும் விவசாயத்தையும் பாதுகாக்கும் நோக்கில் அனைத்து மணல்குவாரிகளையும் மூட வேண்டும் மக்கள் கட்டிடம் கட்ட எம்.சாண்ட் மூலம் கட்டுவதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து பேசினார்கள்.