எம்.ஜி.ஆர் பாட்டுக்கு ரேக்கிங் செய்த அரசு பள்ளி மாணவர்கள்! கண்டு கொள்ளாத பள்ளி தலைமை!
கு.சக்திவேல்,
சமீப காலமாக அரசு பள்ளி மாணவர்கள் செய்யும் ஒழுங்கீண செயல்கள் அடங்கிய வீடியோ காட்சிகள் வாட்ஸாப் போன்றவற்றில் பரவி வருகிறது.
இந்நிலையில் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையில் மாணவர்களை ராகிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளியின் வகுப்பறையிலேயே பள்ளி மாணவர்களை ராகிங் செய்து நடனம் ஆட வைப்பது போலவும் இரண்டு மாணவர்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டு மற்ற மாணவர்களை பரிட்சை எழுதும் பேடால் விசறவைத்துள்ளனர் இதில் நடனம் ஆடாத மாணவர்களையும் காற்று வீசாத மாணவர்களை உடன் பயிலும் மாணவர்கள் அடித்துள்ளனர்.
இந்த செய்கைக்கு அதோ அந்த பறவை போல பாட வேண்டும் என்கிற எம்.ஜி.ஆர் பாடலை பாடினர்.
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்குள் ராக்கிங் செய்யக்கூடாது என கடுமையான சட்டங்கள் இருந்தாலும் இதுபோல பள்ளிகளில் மாணவர்கள் ராகிங் செய்வதை ஆசிரியர்களால் தடுக்க இயலவில்லை. சில பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்களே மாணவர்களை ஸ்டிரைக் செய்யவும், அராஜகம் செய்யவும் ஊக்குவிக்கிறார்கள்.
மேலும், சில ஆசிரியர்கள் எவ்வளவு கண்டித்தாலும் மாணவர்கள் மதிப்பதில்லை என்பதும் தனிக்கதை.
இவற்றையெல்லாம் கடந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஆசிரியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது, பெற்றோர்களை வைத்து மிரட்டுவது போன்ற செயல்களினால் ஆசிரியர்கள் நொந்து போயுள்ளனர்.
சில பள்ளிகளில் இப்படிப்பட்ட மாணவர்களின் ஒழுங்கற்ற செயலுக்கு சில ஆசிரியர்கள் ஆதரவாகவும் உள்ளனர்.
அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் 100% சேர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு செய்து வரும் நிலையில் இது போல பள்ளி மாணவர்களுக்குள்ளேயே ராகிங் செய்யப்படுவதால் மற்ற மாணவர்கள் பள்ளிக்கு வர பயப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பு:-வேலூர்,தொரப்பாடி அரசு பள்ளியில் அராஜகம் செய்த மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்த ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் சம்மந்தப்பட்ட மாணவர்களை பத்து நாட்களுக்கு சஸ்பெண்டு செய்திருக்கிறார். இது போன்ற நடவடிக்கையை மாநிலம் முழுவதிலும் எடுத்தால் புள்ளிங்கோ கொஞ்சம் அடங்குவார்கள்.