வங்கி ஜெனரேட்டர் மக்கர்! தீவிபத்து பரபரப்பு!!

கு.அசோக்,
இராணிப்பேட்டை தனியார் வங்கியில் திடீரென இன்று காலை மேல் தளத்தில் உள்ள ஜெனரேட்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் மேல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் இன்று காலை திடீரென தீப்பற்றி எறிந்தது.
அப்போது வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த வங்கி காவலாளி மற்றும் ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவலை தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வங்கியின் மேல் தளத்தில் எரிந்து கொண்டிருந்த தீயிணை அணைக்க தொடங்கினர்கள்.
ஆனால் தீயாணது அப்பகுதி முழுவதும் பரவி கருமூட்டமாக காட்சியளித்தன.வங்கியின் மேல் மாடி தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்து.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து ஜெனரேட்டர் ஆன் செய்த பத்து நிமிடத்தில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.