கூலி தொழிலாளி வீட்டுக்கு 94 ஆயிரம் மின்கட்டணம்! அட ஆபிசர்களா?

டன்டனக்கா.சீனு,
கூலி தொழிலாளி ஒதுவருக்கு மின்சாரவாரியம் ஷாக் கொடுத்திருக்கிறது.
ஈரோடு மாவட்டம் மல்குத்திபுரம் தொட்டியை சேர்ந்தவர் ரேவண்ணா, இவர் கூலித் தொழிலாளி ஆவார். ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் கடந்த சில ஆண்டுகளாக ரேவண்ணாவின் வீட்டுக்கு மின் கட்டணமே வராமல் இருந்தது.
ஏனெனில் இவர் தனது வீட்டுக்கு 40 முதல் 50 யூனிட் வரையே மின்சாரம் பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று அவரது செல்போனுக்கு 94 ஆயிரத்து 985 ரூபாய் மின் கட்டணம் கட்ட வேண்டும் என குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்த ரேவண்ணா அதிர்ச்சி அடைந்தார். அவர் தாளவாடி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டார்.
அதற்கு அவர்கள், 'மின்கட்டணம் கணக்கீடு செய்யும்போது என்ன வருகிறதோ அதை முதலில் கட்டுங்கள், பின்னர் உங்கள் விளக்கத்தை சொல்லலாம் என்று ஒரு சின்சியர் ஆபிசர் சொல்லியிருக்கிறார்.
இதனால் மயக்க நிலைக்கு சென்ற ரேவண்ணா அய்யா அவ்வளவு பணத்தை நான் பார்த்ததே கிடையாது, வேணும் என்றால் நான் உங்க ஆபிசிலியே தங்கி வேலை செய்து கழிக்கிறேன் என்று கண்ணீர் விட்டிருக்கிறார்.
அவரது பரிதாப நிலையை பார்த்த பொதுமக்கள் ஆபிசரை வெளுத்த பின்னர், சாரிங்க கணக்கீடு போது ஏதோ குளறுபடி ஏற்பட்டிருக்கும். அதை சரிசெய்து தருகிறோம்' என தெரிவித்து ரேவண்ணாவை கூல் செய்திருக்கிறார்கள்.