தாயின் கருவறையும்...கல்லறையும் மட்டுமே பாதுகாப்பு! மாணவியின் கடைசி கடிதம்!

ம.பா.கெஜராஜ்,
சென்னையை அடுத்த மாங்காட்டில் அரசு பள்ளியில்11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாலியல் தொல்லை தான் காரணம் என்று கடிதங்களின் வயிலாக அந்த மாணவி தெரியப்படுத்தியிருக்கிறார்.
அந்த மாணவி எழுதிய மூன்று கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த கடிதம் ஒன்றில் பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே என உருக்கமாக எழுதியுள்ளார்.
மேலும் பள்ளிக்கூடம், ஆசிரியர் என பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு கிடையாது.
உறவினர்களிடமும் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியவில்லை.
எப்போதுமே .......அதற்காகவே செயல்படுகிறார்கள் என ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
இன்னொறு கடிதத்தை எழுதி பின்னர் அதை கிழித்துள்ளார்.
அதை சேர்த்து படித்த போது பெரிய க்ளூ ஒன்று கிடைத்திருக்கிறது.
ஆசிரியர் ஒருவரின் மகன் என்னை பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தான். நான் பிரச்சனை வேண்டாம் என வீட்டில் சொல்லவில்லை. தயவு செய்து அவனை சும்மா விடவேண்டாம் என்று அந்தக் கடிதத்தில் எழுதி வைத்திருக்கிறார் மாணவி.
நான் கடைக்கு போகும் போது என் பெண் அறைக்குள் இருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து வீடு திரும்பினேன். அவள் வெளியிலேயே வரவில்லை. பின்னர் பார்த்த போது மின் விசிறியில் அவள் தூக்கு போட்டுக் கொண்டு இறந்து கிடந்தாள்.
அவளுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளைப் பற்றி தெரியாமல் போச்சே, எங்களிடம் சொல்லியிருந்தால் விட்டு இருக்கமாட்டோமே, அந்த ஆசிரியரின் மகனை போலிஸ்காருங்க சும்மா விடக்கூடாது என்று அழுதுக்கொண்டே சொன்னார்.
தனியார் பள்ளி டீச்சரின் 17 வயது டார்ச்சர் மகன் தற்போது போலிசார் பிடியில் உள்ளானாம்.